Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்வு!

Print PDF

தினமலர்             13.12.2013 

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்வு!

சென்னை:'பருவ மழைக்குப்பின், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நிலத்தடி நீரில் இருந்த உப்புத்தன்மை அளவும் குறைந்துள்ளது' என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில், வீடுகள், கட்டடங்கள் தோறும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க, தமிழக அரசு, 2003ம் ஆண்டில் உத்தரவிட்டது. அதன்படி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.

சென்னையில் மட்டும், எட்டு லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. பருவ மழைக்கு முன், சீரமைக்க வலியுறுத்தி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பருவ மழைக்குப்பின், பகுதி வாரியாக, குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதோடு, குடிநீரில் கரைந்திருந்த உப்புத்தன்மையின் அளவும் குறைந்துள்ளது தெரிய வந்து
உள்ளது.

சென்னையில், பொதுவாக, 4.20 மீட்டராக இருந்த நிலத்தடிநீர் மட்டம், 0.80 மீ்ட்டர் அளவு உயர்ந்து, 3.40 மீட்டர் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக, ஆலந்துார் - 2.65 மீட்டர்; பெருங்குடி-1.80, அடையாறு-1 மீட்டர் அளவுக்கு நிலத்தடி மட்டம் அதிகரித்து உள்ளது.

ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார், திருவொற்றியூர், மணலி மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் உப்புத்தன்மை, 1,200 பி.பி.எம்., (பாஸ் பர் மில்லியன்) அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது போன்று நிலத்தடி நீர் மட்டம் உயர, பொதுமக்கள் தொடர்ந்து, மழைக்காலத்திற்கு முன், கட்டமைப்புகளை பராமரிக்க வேண்டும் என, சென்னைக்குடிநீர் வாரியம் வலியுறுத்தி உள்ளது.

பகுதி வாரிய நிலத்தடிநீர் மட்ட விவரம்

பகுதி நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழம் (மீட்டர்) உயர்வு (மீட்டர்) உப்புத்தன்மை அளவு (பிபிஎம்)
பருவ மழைக்கு முன் பின் பருவ மழைக்கு முன் பின்

  • திருவொற்றியூர் 3.15 2.70 0.45 2,100 900
  • மணலி 3.80 2.85 0.95 1,900 700
  • மாதவரம் 3.60 3.10 0.50 1,200 400
  • தண்டையார்பேட்டை 3.90 3.60 0.30 1900 900
  • ராயபுரம் 5.60 4.90 0.70 2,100 1000
  • திரு.வி.க.,நகர் 2.30 2.10 0.20 1,800 700
  • அம்பத்துார் 2.40 1.90 0.50 1,900 800
  • அண்ணா நகர் 4.00 3.60 0.40 1,800 700
  • தேனாம்பேட்டை 4.35 3.90 0.45 1,500 600
  • கோடம்பாக்கம் 5.10 4.45 0.65 1,600 500
  • வளசரவாக்கம் 4.90 3.95 0.95 1,500 500
  • ஆலந்துார் 7.45 4.80 2.65 1,700 400
  • அடையாறு 4.60 3.60 1.00 1,600 400
  • பெருங்குடி 6.00 4.20 1.80 2,100 800
  • சோழிங்கநல்லுார் 1.90 1.60 0.30 1,800 500
 

ஆம்பூர் நகராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

Print PDF

தினத்தந்தி           12.12.2013

ஆம்பூர் நகராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

ஆம்பூர் அழகாபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜேசி தலைவர் விஸ்வநாத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.

நகரசபை உறுப்பினர் கராத்தே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஜேசி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

 

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

Print PDF

தினகரன்           12.12.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

திருச்சி, : திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் முன்பு மேயர் ஜெயா தலைமையில் சுகாதார அலுவலர் மாரியப்பன் முன்னிலையில் நேற்று பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பரதாலய குழு இயக்குனர் சத்தியன் குழுவினர் நேற்று நடத்தினர்.

நாடகத்தில், டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கான விபரங்களை பொதுமக்களுக்கு நடித்து காட்டினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், கொட்டாங்குறிச்சி, டயர், உடைந்த மண்பானை, உரல், ஆட்டுக்கல் போன்றவற்றில் நீர் தேங்காமல் இருப்பதற்கும், தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவறை பயன்படுத்திய பின் சுத்தமாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தடுக்கவும், தேவையற்ற பொருட்களை உடன் அப்புறப்படுத்த கோரியும் மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் நடித்து காட்டினார்கள். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மருத்துவ மனைகளில் சென்று பரிசோதித்து கொள்ளுமாறும் நாடகத்தில் அறிவுறுத்தப்பட்டது.

 


Page 65 of 841