தினமலர் 09.03.2010
பணி நியமன உத்தரவு வழங்கல்
விழுப்புரம் : வளவனூர் பேரூராட்சியில் பணி புரிந்து இறந்த துப்புரவு பணியாளர் மனைவிக்கு பணி நியமன உத்தரவை சேர்மன் சம்பத் வழங்கினார்.
வளவனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணி புரிந்த பாலசுப்பிரமணியன் கடந்த ஆண்டு மே 14ம் தேதி பணியின் போது இறந்தார். அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் துப்புரவு பணியாளராக ஏற்ற முறை ஊதிய விகிதத் தில் பணி நியமன உத்தரவை சேர்மன் சம்பத் வழங்கினார். துணைத் தலைவர் சரபோஜி, கவுன் சிலர் ஷெரீப், செயல் அலுவலர் கன்னியப்பன் உடனிருந்தனர்.