Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

புதிய தலைமை செயலகத்தை சுற்றி ரூ. 14 கோடியில் நான்கு வழி சாலை மின் விளக்குகள், பூங்கா, புல்வெளி

Print PDF

தினமணி 02.03.2010

புதிய தலைமை செயலகத்தை சுற்றி ரூ. 14 கோடியில் நான்கு வழி சாலை மின் விளக்குகள், பூங்கா, புல்வெளி

சென்னை, மார்ச்.1: புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிலும் நான்கு வழி சாலைகள், பூங்கா, புல்வெளிகள் மற்றும் நவீன மின் விளக்குளை அமைக்க ரூ. 14 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ. 450 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமைச் செயக வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது.

இந்தப் பணிகளை மார்ச் 8}ம் தேதிக்குள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையிலான உயர் நிலைக் குழு, இந்தத் திட்டப் பணிகளை இரவு பகலாக நிறைவேற்றி வருகிறது. இந்தப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்:

அண்ணாசாலை (அண்ணா சிலை முதல் மேம்பால ரயில் பாலம் வரை), சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட 9,600 சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்தில் போக்குவரத்து வசதிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.

இந்தச் சாலைகள் அனைத்தும் 19 மீட்டர் அகலமுடையதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்களின் இருபுறமும் தலா 2 மீட்டர் அகலமுள்ளதாக நடைமேடைகள் (பிளாட்பாரம்) ரூ. 74 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.

தார்ச்சாலைகள்} ரூ. 1.11 கோடி, நடைபாதை} ரூ. 30 லட்சம், சாலை மைய மேம்பாடு} ரூ. 50 லட்சம், சென்னை தொலைக்காட்சி அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் சீரமைப்பு ரூ. 85 லட்சம்.

மழைநீர் வடிகால் வசதி} 15 லட்சம், 68 மின் விளக்குகள் நிறுவ} ரூ. 48 லட்சம், கூவம் கரை மேம்பாடு, புல்வெளி அமைத்தல் ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாலாஜா சாலை: இந்தச் சாலை 310 மீட்டர் நீளமும், 29 மீட்டர் அகலமுள்ளதாக 4 வழிச்சாலையாக ரூ. 9 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நடைபாதை மேம்பாடு (கேரேஜ் வால்க்) ரூ. 62 லட்சம், தார்ச்சாலை அமைத்தல் ரூ. 1.77 கோடி, நடைமேடை அமைத்தல் ரூ. 67 லட்சம், சாலை மையம் மேம்பாடு} ரூ. 48 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

"லிஃப்ட்' வசதியுடன் நடை மேம்பாலம்: வாலாஜா சாலையில் இரு முக்கிய இடங்களில் "லிஃப்ட்' வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

Last Updated on Tuesday, 02 March 2010 10:07
 

மாநகராட்சி தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

Print PDF

தினமணி 02.03.2010

மாநகராட்சி தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

பெங்களூர், மார்ச் 1: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

÷மேலும் ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்லை நடத்தி முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷இதுதொடர்பாக கால அவகாசம் கேட்டு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் வி. கோபால கெüடா, பி.எஸ்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

÷கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவர்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:

÷மாநகாரட்சித் தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 11-ம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இறுதியானது. எனவே, அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

÷ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 09:36
 

மணல்மேடு பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 02.03.2010

மணல்மேடு பேரூராட்சி கூட்டம்

மணல்மேடு : மணல்மேடு பேரூராட்சி கூட்டம் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் மணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

மணி(துணைத்தலைவர்) : நாகை மாவட்ட அளவில் பேரூராட்சிகளுக்கான இன்ஜினியர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. காலி பணியிடத்தை நிரப்ப அரசை வலியுறுத்த வேண்டும்.

தலைவர்: இன்ஜினியர் பணியிடம் நிரப்புவது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதப்படும்.

டெய்சி : அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

தலைவர்: பேரூராட்சி பகுதியில் கடைவீதி மற்றும் சாலை சந்திப்பு, பள்ளி வளாகம் உட்பட 5 இடங்களில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை அனுப்பப்படும்.

அமிர்தலிங்கம்: ராதாநல்லூர் இடுகாட்டில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன்: மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட குளங்கள், வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. அவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமிர்தலிங்கம் : மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கூடுதல் போலீசார் நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.

தலைவர் : கூடுதல் போலீசார் நியமிக்க கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு கோரிக்கை விடுக்கப்படும். நீர் நிலைகளை தூர்வார பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. பின்னர், பழுதடைந்துள்ள டிப்பர் வாகனத்தை சீர் செய்வது என்பன போன்ற தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 02 March 2010 06:40
 


Page 646 of 841