Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

15 மாநகராட்சி கடைகளுக்கு பூட்டு

Print PDF

தினமலர் 19.02.2010

15 மாநகராட்சி கடைகளுக்கு பூட்டு

மதுரை:பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர்.மதுரையில் அனுமதி பெற்ற இரண்டு ஆயிரம் கடைகள் இருக்கின்றன. இவற்றில் சில கடை உரிமையாளர்கள், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. இப்படியே 20 கோடி ரூபாய் சேர்ந்துவிட்டது. மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் இக்கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.கீழமாரட் வீதி, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அமைந்துள்ள, 15 கடைகள் 12.5 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளன. மருந்து கடை, பேக்கரி, கருவாட்டுக்கடை போன்றவை இதில் அமைந்துள்ளன. நேற்று இக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர்.மொத்த பாக்கி 20 கோடி ரூபாயில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

Last Updated on Friday, 19 February 2010 07:27
 

மூன்றாண்டுக்கு மாநகராட்சி இனங்கள் ஏலம் : 'பினாமி'யுடன் பங்கேற்ற கவுன்சிலர்கள்

Print PDF

தினமலர் 19.02.2010

மூன்றாண்டுக்கு மாநகராட்சி இனங்கள் ஏலம் : 'பினாமி'யுடன் பங்கேற்ற கவுன்சிலர்கள்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் முதல் முறையாக மூன்றாண்டுக்கான குத்தகை ஏலம் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் பலரும் "பினாமி' பெயரில் குத்தகை இனங்களை ஏலம் எடுத்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு குத்தகை இனங்களில் வரி வசூலிப்பதற்கான உரிமம் 2009-10 முதல் மூன்றாண்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரசாணை வெளியிடும் போது பல மாநகராட்சிகளில் ஏலம் விடப்பட்டதால், சென்றாண்டு அரசாணை நிறைவேற்ற முடியாமல் போனது. அரசாணை வெளியிட்ட பின் ஈரோடு மாநகராட்சியில் முதல் முறையாக மூன்றாண்டுக்கான (2010-13) பொது ஏலம் நேற்று நடந்தது. நேதாஜி தினசரி சந்தை, பாரதி வீதியில் உள்ள சிலம்பாரன் குட்டை தினசரி சந்தை, நேதாஜி ரோட்டில் உள்ள ஹெமிங்வே வாரச்சந்தை, தங்கபெருமாள் வீதி மற்றும் நீல்கிரிஸ் சந்து பகுதியில் உள்ள வாரச்சந்தை மற்றும் பெரியார் நகர் வாரச்சந்தை, கனி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டு, பஸ் ஸ்டாண்டில் உள்ள தங்கும் விடுதி, பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டணக் கழிப்பிடம், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கழிப்பிடம், பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டண்டு, ..சி., பூங்கா நுழைவுக் கட்டணம், ஆடுவதைக்கூடம் உள்பட மொத்தம் 27 இனங்களுக்கு நேற்று ஏலம் நடந்தது.

நேதாஜி தினசரி சந்தை, கனிமார்க்கெட், மாநகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் ஆறு மாத உரிமம் கொடுக்கப்பட்டது. ஏலம் எடுக்க வைப்பு தொகை செலுத்தியவர்கள் அனைவரும் நேற்று காலை மாநகராட்சி வளாகத்தில் குவிந்திருந்தனர். இனங்கள் வாரியாக வைப்பு தொகை செலுத்தியவர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏலத்தின் போது தி.மு.., - .தி.மு.., நிர்வாகிகள் அதிகளவில் காணப்பட்டனர். ஏலம் விடும்போது இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பேசி பின்னரே, ஏலம் நடக்கும் அறைக்குள் சென்றனர்.

ஏலம் அறிவிப்பு வெளியாகும்போது தி.மு.., - .தி.மு.., - தே.மு.தி.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் பெரும் பரபரப்பாக காணப்பட்டனர். இதை வைத்து பார்க்கும் போது, மாநகராட்சி இனங்கள் பலவற்றை கவுன்சிலர்கள், தங்கள் ஆதரவாளர்களை வைத்து எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து கவுன்சிலர்களிடம் கேட்டபோது, "கவுன்சிலர்கள், அவர்களை சார்ந்த குடும்பத்தினர் ஏலம் எடுக்க கூடாது. ஏலம் நடப்பதை கவுன்சிலர்கள் பார்வையிடலாம். இனங்கள் எவ்வளவு மதிப்புக்கு ஏலம் விடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளோம்' என்றனர். கமிஷனர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது," பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட நான்கு இனங்கள் மட்டும் ஏலம் போகவில்லை. மற்ற இனங்கள் நன்றாக ஏலம் போனது,' என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 07:24
 

சிதம்பரத்தில் போக்குவரத்து இடையூறு 15 மாடுகள் மீண்டும் சிறை பிடிப்பு

Print PDF

தினமலர் 19.02.2010

சிதம்பரத்தில் போக்குவரத்து இடையூறு 15 மாடுகள் மீண்டும் சிறை பிடிப்பு

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் நேற்று மீண்டும் சிறை பிடிக்கப் பட்டன.சிதம்பரம் நகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. சிதம்பரம் நகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் சிறை பிடித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் நகர சாலைகளில் மாடுகள் வலம் வரத் துவங்கின. நகராட்சி ஆணையர் ஜான்சன் உத்தரவுப்படி நேற்று சிதம்பரம் நகர முக்கிய வீதிகளான கீழ வீதி, எஸ்.பி கோவில் தெரு, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரிந்த 15 மாடுகள் சிறை பிடிக்கப் பட்டன. துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையில் ராஜாராமன், சுகுமாறன் மாடுகளை சிறை பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்தனர். மேலும் மாடுகளுக்கு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர.

Last Updated on Friday, 19 February 2010 07:21
 


Page 660 of 841