தினமணி 10.12.2013
மாநகராட்சியில் தட்டச்சர் காலிப் பணியிடம் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணியில் சேருவது தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் காலிபணியிடத்துக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றில் உயர்நிலையும் மற்றொன்றில் இளநிலையும் தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு தேர்வுச் செய்யப்படவுள்ளனர். தகுதியுடைய நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரை உரிய சான்றிதழ்களுடன் அலுவலக வேலை நாள்களில் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.