Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் மேல்முறையீடு செய்ய அரசு திட்டம்

Print PDF

தினமணி 16.02.2010

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் மேல்முறையீடு செய்ய அரசு திட்டம்

பெங்களூர், பிப்.15: பெங்களூர் மாநகராட்சி மன்ற தேர்தல் விவகாரம் 3-வது முறையாக உச்ச நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுகிறது. இம்முறை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

பெங்களூர் மாநகராட்சி மன்ற தேர்தலை நடத்த கடந்த ஆண்டு இறுதியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தொடங்கியது. மாநில அரசும் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை நவம்பர் 30-ம் தேதி அறிவித்தது.

÷இதைத்தொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி மாநகராட்சி மன்ற தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுதாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

÷இந்நிலையில் அரசு அறிவித்த இட ஒதுக்கீடு பட்டியலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வார்டுகளில் வசிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் சாதிவாரி இட ஒதுக்கீடு செய்து, புதிய பட்டியலை அறிவித்துதிட்டமிட்டபடி பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷ உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அந்த மனுவை விசாரித்து, அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் சிறப்பு மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலானபெஞ்ச், இட ஒதுக்கீடு பிரச்னையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விளக்கம் பெற்று தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷இந்நிலையில் தேர்தல் நடத்த போதிய கால அவகாசம் இல்லாததால் தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுஉயர் நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி பெறாமல் தேர்தலை ரத்து செய்தது சட்டவிரோதம். எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து முதலில் அறிவித்தபடி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் ராமச்சந்திரப்பா, ரமேஷ், ஹுச்சப்பா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோபால கெüடா தலைமையிலான உயர் நீதிமன்ற பெஞ்ச், மார்ச் 30-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்தி முடிக்கஉத்தரவிட்டது.

÷ ஆனால் மார்ச் மாத்திற்குள் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

÷மார்ச் மாதம் எஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சியை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் மார்ச் மாதம் தேர்தல் நடத்துவது முடியாத காரியம் என உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

÷இதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மே மாதத்துக்குப் பிறகு தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது என்று கடந்த சனிக்கிழமை நடந்த பாஜக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா கண்டிப்புடன் கூறியுள்ளார். ÷

அவ்வாறு ஒத்திவைத்தால் அது பாஜகவுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என அவர் அரசை எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சி மன்றத் தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்ய தயராகிவிட்டது அரசு.

Last Updated on Tuesday, 16 February 2010 06:08
 

நகராட்சி பகுதிகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி! எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டம் மார்ச்சில் துவக்கம்

Print PDF

தினமலர் 16.02.2010

நகராட்சி பகுதிகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி! எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டம் மார்ச்சில் துவக்கம்

கடலூர் : சொர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தொழில் பயிற்சி மார்ச் மாதம் துவங்குகிறது. சொர்ண ஜெயந்தி ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத் தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையிலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் அடிப்படையில் 18 முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு குளிர்சாதன பெட்டி பழுது பார்த் தல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது பார்த் தல், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், மொபைல் போன் பழுது பார்த்தல், வரவேற்பாளர் (அலுவலகம், மருத்துவமனை), செவிலியர், சமையல் கலை, ஜே.சி.பி., ஓட் டுனர் பயிற்சி உள்ளிட்ட தொழில் பயிற்சிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. 6 மாதம் நடைபெறும் இந்த பயிற்சிக்கு நபர் ஒருவருக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்காக அந்தந்த நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பயிற்சி முடித் ததும் அந்த நிறுவனமே அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. மார்ச் மாதம் பயிற்சி துவங்கும் என அறிவிக்கப் பட் டுள்ளது.

முதல் கட்ட பயிற்சியாக விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை ஐ.டி.., மற்றும் "ட்ரெசிஸ்டெட்' இணைந்து நடத்தும் பயிற்சிக்கு 48 பேர் அனுமதிக்கப்பட்டு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் 30 பேர் அனுமதிக்கப்பட்டு ஏ.சி.டி., நிறுவனத்தில் பயிற்சிக் காக தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நெல்லிக்குப்பத்தில் 38 பேருக்கு அனுமதியளிக் கப்பட்டு 28 பேரும், பண் ருட்டியில் 24 பேருக்கு 23 பேரும் தேர்வு செய் யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு கடலூர் மஞ்சக் குப் பம் "ட்ரெசிஸ்டெட்' நிறுவனத்தில் பயிற்சி அளிக் கப்படும். அனைத்து நகராட்சியிலும் அந்தந்த பகுதிகளில் விண்ணப்பம் அளித்து தேர்வு செய்துள்ள நிலையில் கடலூர் நகராட்சியில் நேற்றுதான் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சேர்மன் பேசுகையில் "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் கடலூர் நகராட்சிக்கு 104 பேருக்கு அனுமதிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு கவுன் சிலர்களும் தங்கள் பகுதியில் திறமையுள்ள 2 பேரை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்' என கூறி அதற்கான படிவங் களை வழங்கினார்.

Last Updated on Tuesday, 16 February 2010 03:07
 

மக்களிடம் நேரடி குறை கேட்பு மாநகராட்சி மேயர் திடீர் அதிரடி

Print PDF

தினமலர் 16.02.2010

மக்களிடம் நேரடி குறை கேட்பு மாநகராட்சி மேயர் திடீர் அதிரடி

சேலம்: சேலம் மாநகராட்சியில் நேற்று மக்கள் குறைகளை மேயர் கேட்டறிந்தார். தமிழகத்தில் சேலம் மாநகராட்சியில் மட்டுமே, வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மேயர் அல்லது கமிஷனர் மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. அதையடுத்து, திங்கள்தோறும் ஏராளமான கோரிக்கை மனுக்கள் குவிந்தன. கடந்த ஓராண்டாக, மேயர், கமிஷனர் ஆகியோர் மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறுவதை நிறுத்தினர். மக்களும் மாநகராட்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். திங்கள் கிழமைகளில் மாநகராட்சி வளாகம் வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில், மேயர் ரேகா பிரியதர்ஷிணி நேற்று திடீரென மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு, "உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார்.

சாலைகள், சாக்கடை வசதிக்கோரி வந்த மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மொபைல் ஃபோன் மூலம் விளக்கம் கேட்டார். விரைவில் வேலைகளை முடிக்க உத்தரவிட்டார். இதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், "வாரந்தோறும் மேயர் குறைகளை கேட்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.

 


Page 665 of 841