Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு

Print PDF

தினமணி 08.02.2010

நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு

வத்தலகுண்டு, பிப். 7: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவருக்கு தி.மு..வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

நிலக்கோட்டை பேரூராட்சியின் 10-வது வார்டு உறுப்பினராக இருந்தார் வேல்முருகன். இவர், கடந்த வாரம் பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே இவருக்கு, 10-வது வார்டு தி.மு..வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா, மணியக்காரன்பட்டியில் நடந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.. கிளைச் செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றியப் பிரதிநிதி லட்சுமணன், கிராம பிரமுகர்கள் முத்துக்கருப்பன், பாண்டி, முத்துராமன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பாராட்டினர். இதில், தி.மு.. நிர்வாகிகள் ஜோசப், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 09:44
 

ரூ.20 லட்சத்தில் புதிய அலுவலகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 08.02.2010

ரூ.20 லட்சத்தில் புதிய அலுவலகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

போளூர்: 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு போளூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.போளூர் பேரூராட்சி கூட் டம், தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. செ யல் அலுவலர் வாசுதேவன், துணைத் தலைவர் சண் முகம் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில் பேரூராட்சி பழைய அலுவலகத்தை இடி த்துவிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு கடந்த மாதம் 21ம் தேதி டெண்டர் விடப்பட்டதை அங்கீகரித்தல், கேடந்த மாதம் 13ம் தேதி 2008-09ம் ஆண்டிற்கான ரூ.22 லட்சம் மதிப்பிலான பின்தங்கிய மண்டல மானிய நிதி பணிகள் டெண்டர் விட ப்பட்டதை அங்கீகரித்தல் , முதியோர் உதவி தொகை பெறும் 360 நபர்களின் பெயர்களை வறுமை கோட்டிற்கு கீழ் வாழும்பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் தீர்மானத்தை அங்கீகரித்தல் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

Last Updated on Monday, 08 February 2010 06:20
 

1.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமலர் 08.02.2010

1.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ராமநாதபுரம் : நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது.

முகாமையொட்டி ஒரு லட்சத்து 85 ஆயிரம் சொட்டு பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதற்காக மாவட்டத்தில் 1152 மையங்களில் 4572 நபர்கள் பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், அகதிகள் முகாம் என பல இடங்களில் சொட்டு மருந்துகள் வழங்கப் பட்டன. சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசுத்துறை பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , ரோட்டரி, அரிமா சங்கத்தினரும் முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் முஜிபுர்ரகுமான், சுகாதார துணை இயக்குனர் உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் லலிதகலா, துணை தலைவர் ராஜாஉசேன், துப்புரவு அலுவலர் கருணாநிதி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார், ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 08 February 2010 06:01
 


Page 673 of 841