Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 08.02.2010

பேரூராட்சி கூட்டம்

நெய்வேலி : நெய்வேலி கெங்கைகொண்டான் தேர்வு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடந்தது.மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கெங்கைகொண்டான் தேர்வு நிலை பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டிய அலுவலக கட்டடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் உள்ளிட்டவற்றை வரும் 13ம் தேதி திறக்க முடிவு செய்யப் பட்டது. மேலும் பேரூராட் சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை தாமதமின்றி செலுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Monday, 08 February 2010 05:49
 

திருவள்ளூர் நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும்

Print PDF

தினகரன் 05.02.2010

திருவள்ளூர் நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகரமன்ற கூட்ட அரங்கம் ரூ.20 லட்சம் செலவில் புதுக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கை இ..பி.சிவாஜி எம்எல்ஏ திறந்து வைத்தார். பின்னர், நகரமன்ற கூட்டம், அதன் தலைவர்பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையர் முத்து ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருவள்ளூர் நகரம் மாவட்டத்தின் தலைமையிடமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. ஏராளமான தொழிற்சாலைகளும், தனியார் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இதனால், நகராட்சியை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் ஓட்டல்கள் மற்றும் தெருவோர கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேப்பர் பொருட்களை பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 05 February 2010 11:18
 

18,000 பேருக்கு யோகா பயிற்சி

Print PDF

தினகரன் 05.02.2010

18,000 பேருக்கு யோகா பயிற்சி

Swine Flu சென்னை : சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை, யோகா பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிப்பன் மாளிகை வளாகத்தில் யோகா பயிற்சி, மருத்துவ பரிசோதனை நேற்று அளிக்கப்பட்டது.

இவற்றை மேயர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:

மாநகராட்சி உறுப்பினர்கள், பள்ளி மாணவ & மாணவிகள், ஆசிரியர்கள், லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சியில் பணிபுரியும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு யோகா பயிற்சியுடன் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

பொதுத்துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, இயந்திர பொறியியல் துறை, திடக்கழிவு மேலாண்மைத்துறை, மன்றத்துறை என 6 துறைகளை சார்ந்த 250 ஆண், பெண் ஊழியர்களுக்கு மனவளக்கலை மன்றம் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு 2 மணி நேரம் இந்த பயிற்சி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து மண்டல அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி ரூ.18 லட்சம் செலவு செய்கிறது.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியம் கூறினார். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் ஜோதி நிர்மலா, உதவி ஆணையர் திவ்யா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 05 February 2010 11:15
 


Page 674 of 841