Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி             07.12.2013

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆதார் அட்டைக்கான இரண்டாம்கட்ட புகைப்படம் எடுக்கும் பணி டிச.10ஆம் தேதி துவங்க உள்ளதாக சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தெரிவித்தார்.

 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,025 பேர் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ளனர். இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்காக முதல் சுற்றில் 23,058 பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். டிச.10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ள இரண்டாம் கடட புகைப்படம் 16,491 பேருக்கு எடுக்கப்பட உள்ளது.

 நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்கள் மூலம் விடுபட்டவர்கள் கணக்கெடுப்பு வீடுதோறும் நடத்தி அவற்றைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும். இதன்பின்னர் விடுபட்டவர்கள் பற்றிய விவரங்கள் கணினியில் தொகுக்கப்படும். இவர்கள் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்க வரும்போது ஒப்புகைச் சீட்டு இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றின் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் நகலுடன் புகைப்படம் மையங்களுக்குச் சென்று படம் எடுத்துக் கொள்ளலாம்.

 சிவகங்கை வார்டு எண் 1 முதல் 5 வரை டிச.10, 11ஆம் தேதி, வார்டு எண் 6 மற்றும் 7ல் டிச.11 மற்றும் 12ஆம் தேதி, வார்டு எண் 8 முதல் 11 வரையிலானவர்களுக்கு டிச.12 மற்றும் 13ஆம் தேதிகளிலும், வார்டு எண் 12 மற்றும் 13ல் உள்ளவர்களுக்கு 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும், வார்டு எண் 14 முதல் 18 வரையிலானவர்களுக்கு டிச.14 மற்றும் 15ஆம் தேதிகளிலும், வார்டு எண் 19 மற்றும் 20ல் உள்ளவர்களுக்கு டிச.15 மற்றும் 16ஆம் தேதியும், வார்டு எண் 21 முதல் 25 வரையிலானவர்களுக்கு டிச.16 மற்றும் 17ஆம் தேதிகளிலும், வார்டு எண் 26 மற்றும் 27ல் உள்ளவர்களுக்கு டிச.17 மற்றும் 18ஆம் தேதிகளிலும் புகைப்படம் எடுக்கப்படும்.

 பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜபாண்டி (செல் 9600992860), அல்லது மேற்பார்வையாளர் சரவணன் (செல் 9715326370) ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என நகர்மன்றத் தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார்.

 

அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவக் கண்காட்சி

Print PDF

தினமணி             07.12.2013

அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவக் கண்காட்சி

சென்னை மாநராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கண், பல், தோல், மார்பகப் புற்றுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இது தொடர்பாக மருத்துவக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள், நோய் பாதித்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிக்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இம்முகாமை சென்னை மாநகர சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் தொடங்கி வைத்து பேசியது:

சென்னை முழுவதும் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைப்பெறுகிறது.  இந்த முகாம் 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். நாளொன்றுக்கு 200 இடங்கள் என 5 நாட்களில் 1000 மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல அதிகாரி ராஜேந்திரன், மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் லட்சுமிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை

Print PDF

மாலை மலர்              07.12.2013

அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை
 
அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை
 
சென்னை, டிச.7 - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தை கடந்த 20–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

புறநோயாளிகள், உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் இந்த உணவகத்தை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் குறைந்த விலையில் காலை, மதியம் உணவு கிடைப்பதால் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று உணவருந்தி செல்கிறார்கள். வரிசையை ஒழங்குப்படுத்தும் பணியில் போலீசாரும் அங்கு ஈடுபட்டு வருகிறார்கள்.

சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு ‘சுடச்சுட’ வழங்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழ்நாட்டிலேயே பெரிய உணவகமாக இது செயல்பட்டு வருகிறது. 6000 சதுர அடியில், இயங்கும் ஒரே உணவகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உணவகம் தொடங்கி 15 நாட்களில் 75 ஆயிரம் இட்லி இங்கு விற்பனை ஆகியுள்ளது. 13 ஆயிரம் பொங்கல், 18 ஆயிரம் சாம்பார் சாதம், 8 ஆயிரம் தயிர் சாதம் விற்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘அம்மா உணவகத்தில்’ சப்பாத்தி மாலை நேரத்தில் வழங்கப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 10 நாளில் சப்பாத்தி விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவத்தில் இரவு நேரத்தில் டிபன் கிடைக்காமல் வெளியே சென்று வாங்க வேண்டி உள்ளது. சப்பாத்தி விற்பனை தொடங்கிவிட்டால் 3 வேளையும் குறைந்த செலவில் சாப்பிட முடியும். அதனால் சப்பாத்தி விற்பனை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

 


Page 69 of 841