Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கீழக்கரை நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 03.02.2010

கீழக்கரை நகராட்சி கூட்டம்

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது. தெருவிளக்குகள் விலை தொடர்பாக, கவுன்சிலர்கள் ஹமீதுகான்,மணிகண்டன்,பாபு, லாபிர் ஆட்சேபனை செய்தனர். இது தொடர்பாக தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கு மிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பொது சுகாதார உபயோகத்திற்கு தேவையான சுண்ணாம்புதூள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பயன்பாட்டிற்கு தேவையானசோடியம் மற்றும் குழல் விளக்கு பழுது நீக்க உபகரணங்கள் சப்ளை செய்த வகைக்கு 90ஆயிரத்து 19 செலவு காட்டியிருப்பதற்கும் கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதை தொடரந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ,கீழக்கரை சி.எஸ்.., சர்ச் ரோடு வழியாக 21 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டுவரும் சிமென்ட் சாலைக்கு கூடுதலாக 3லட்சம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால், இதை பொது நிதியிலிருந்து செலவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து கவுன்சிலர் ஹமீது கான் பேசுகையில்,""கீழக்கரையில் நடைபெறவுள்ள பாதாள சாக்கடை திட்டம் எப்ரலில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த ரோடுகள் தோண்டும்போது இதுன்செலவு எல்லாம் வீணாகிவிடும்'' என்றார்

Last Updated on Wednesday, 03 February 2010 07:46
 

செம்மொழி மாநாட்டுக்கு ரூ.100 கோடிக்கு பணிகள் : கோவை மாநகராட்சி கமிஷனர் புதிய தகவல்

Print PDF
தினமலர் 03.02.2010

செம்மொழி மாநாட்டுக்கு ரூ.100 கோடிக்கு பணிகள் : கோவை மாநகராட்சி கமிஷனர் புதிய தகவல்

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு, 100 கோடி ரூபாய் மதிப்பில், கோவை பகுதியில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை விபரம்: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டுக்காக, அரசிடமிருந்து நிதி பெற்று, மாநகராட்சி மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவை மாநகராட்சியால், ஏழு கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்காக்களும், ஆறு கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடிகால்களுடன் கூடிய நடைபாதையும், இரண்டு கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும், அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலமாக செயல்படுத்தும் பணிகள் இல்லை. மாநகராட்சியின் நிதியிலிருந்தே செயல்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சி செய்யும் இந்த பணிகள், ஜன.18 அன்று மேயரால் தொடங்கி வைக்கப்பட்டு, நடந்து வருகின்றன. "அரசு நிதியில்லாமல் மாநகராட்சியின் நிதியில் பணியை மேற்கொள்ள ஆய்வு நடக்கிறது' என்று கோவை மாநகராட்சிப் பொறியாளர் கூறியிருப்பது, அரசு அளிக்கும் நிதி தவிர, கூடுதலாக மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து செலவு செய்து, பணிகள் மேற்கொள்வதையே குறிக்கிறது. மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளுக்காக அரசிடமிருந்து நிதி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் கோரியதற்கு, நிதி வழங்குவதற்கான உயர் மட்டக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது என்பதே உண்மை நிலையாகும். நிதி ஒதுக்கீடு கோரிய இரு வாரத்துக்குள் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த சிறு இடைவெளியில் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மிகுந்த காலதாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்ற தகவல் வெளியாகியுள்ளது. செம்மொழி மாநாட்டுக்காக, மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து 24 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அரசிடமிருந்து 33 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் நிதி பெற்றும், பொதுத்துறை, தனியார் துறை பங்களிப்புடன் 48 கோடி ரூபாய்க்குமாகச் சேர்த்து மொத்தம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பயனடையும் வகையில் பணிகள் நடக்கவுள்ளன.

இவற்றைத் தவிர்த்து, 60 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத்துறைக்கும், 55 கோடி ரூபாய்க்கு மின் வாரியத்துக்கும், ஒரு கோடியே 41 லட்ச ரூபாய்க்கு ஊராட்சிப் பகுதிகளுக்கும், 2 கோடியே 56 லட்ச ரூபாய்க்கு பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நிதி அளித்து பணிகள், மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஓரிரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கமிஷனரா? கலெக்டரா? செம்மொழி மாநாட்டுக்காக இதுவரை ஒரு பைசா கூட நிதி வரவில்லை என்ற தகவலை மறுத்து அறிக்கை கொடுத்துள்ள, கோவை மாநகராட்சி கமிஷனர், தனது அறிக்கையில் எங்குமே "இவ்வளவு கோடி நிதி வந்துள்ளது' என்று கூறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறைக்கும், மின் வாரியத்துக்கும், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் தகவல் கூறியிருப்பதன் மூலம், கலெக்டருக்குரிய அதிகாரத்தை கமிஷனராகவே எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது
Last Updated on Wednesday, 03 February 2010 07:33
 

பிளாட்பார கடைகளை முறைப்படுத்த உத்தரவு

Print PDF

தினமலர் 03.02.2010

பிளாட்பார கடைகளை முறைப்படுத்த உத்தரவு

சிவகங்கை: பிளாட்பார கடை வைத்திருப்போரிடம் வரி வசூல் செய்ய, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. ரோட்டோரம், பிளாட்பாரங்களில் அதிகளவில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இவர்களுக்கு வரி, வாடகை உள்ளிட்ட பிரச்னைகள் இல்லை. இக்கடைகளில் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதோடு, போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

கணக்கெடுப்பு: ரோட்டோர கடைக்காரர்கள், பகலில் வியாபாரம் செய்து விட்டு, தள்ளு வண்டி, டிரை சைக்கிள்களை, அங்கேயே விட்டு செல்கின்றனர். சில அசம்பாவிதங்கள் நிகழும் போது, கடை வைத்திருப்போர் பற்றிய விபரம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ரோட்டோர கடைகளை முறைப்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி, இக்கடைகள் குறித்து கணக்கெடுக்கவும், வரிவிதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வியாபாரிகளிடம் வருமானம், நிலையான முகவரி போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். செருப்பு, துணி போன்றவை விற்போருக்கு, வரி விதிக்கப்படவுள்ளது. இடையூறாக உள்ள தள்ளு வண்டிகள் குறித்தும் கணக்கெடுக்கப்படும் என்றார்.

ஆக்கிரமிப்பு பெருகும்: ரோட்டோர கடைகளை, அரசு முறைப்படுத்தினால், வரி செலுத்துகிறோம் என்ற உரிமையில், புதிய புதிய ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகும். அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமே ஒழிய, முறைப்படுத்த கூடாது.

Last Updated on Wednesday, 03 February 2010 07:11
 


Page 681 of 841