Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 02.02.2010

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மன்னார்குடி:மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னார்குடி நகராட்சிக் கூட்டம் தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தமிழரசி, ஆணையர் மதிவாணன், பொறியாளர் முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தமிழக அரசிடம் மானியமாக 10 கோடி ரூபாய் கோருவது, நகரில் உள்ள டெப்போ சாலை, நீதிமன்றம் செல்லும் சாலை, உப்புக்காரத்தெரு, சர்ச் அக்ரஹாரம், கே.கே. நகர் சாலை உட்பட சாலைகளை சீரமைக்கப்பதற்காக 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம்;கண்ணதாசன்: கோயில் நிலங்களில் பட்டா இல்லாமல் குடிசை போட்டு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா?

வீரகுமார்: இலவச வீட்டு மனைப்பட்டா நிச்சயம் கொடுக்கப்படும்.
கலைவாணன்: அசேஷம் பகுதி மெயின் ரோட்டில் செப்டிக் டேங்க் நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்கிறது.

வீரகுமார்: எனது வார்டில் உள்ள மீன் மார்க்கெட் புதிதாகக் கட்டப்படுமா?

கலைவாணன்: குடிநீர் வரி விதிப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் வரப்பெற்றுள்ளது. அந்த நிதியை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனந்தராஜ்: என்து வார்டில் உள்ள நல்லூரான் குட்டை தூர்வாரி சீரமைக்கப்படுமா?

கலைவாணன்: எனது வார்டில் பலர் குடிநீர் இணைப்பு பெற விரும்புகின்றனர். ஆனால் அப்பகுதியில் பைப்லைன் போடப்படாமல் உள்ளது.

ஆணையர்: ஒரு தெருவில் 50 வீடுகள் இருந்தால் குறைந்தபட்சம் 5 வீடுகளைச் சேர்ந்தவர்களை குடிநீர் இணைப்பு கேட்டு பணம் கட்டச் சொல்லுங்கள். பைப் லைன் அமைக்க ஏற்பாடு செய்கிறோம்.

வீரகுமார்: நகரில் கொசு மருந்து அடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வசந்தி: எனது வார்டில் கொசு மருந்து அடிப்பதே இல்லை.

கோபி: வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். உரிமையாளர்கள் வந்து கேட்டால் அபராதம் வசூலித்து விட்டு திரும்ப ஒப்படைக்கலாம்.

ஆனந்தராஜ்: குடிநீர்த் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமா?

ஆணையர்: உத்தேச செலவினம் என்று தான் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. பொருள் வாங்கும் போது கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்.

கோபி: பஸ் ஸ்டாண்ட் ரோடு சரியாக இல்லை. கீழ்ப்பாலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம்உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது. மேலும், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கவுன்சிலர் சந்திரசேகர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Tuesday, 02 February 2010 06:29
 

குடிநீர் கசிவு சரி செய்ய வாங்கிய நவீன வாகனம் வீண்: மாநகராட்சி வளாகத்தில் 'சும்மா' நிற்கிறது

Print PDF

தினமலர் 02.02.2010

குடிநீர் கசிவு சரி செய்ய வாங்கிய நவீன வாகனம் வீண்: மாநகராட்சி வளாகத்தில் 'சும்மா' நிற்கிறது

ஈரோடு: குடிநீர் கசிவு சரிசெய்வதற்காக மாநகராட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட "புளு பிரிகேடு' வாகனம் பயனற்று கிடக்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு வைராபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து, சுத்திகரிப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வ..சி., பூங்கா, கருங்கல்பாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ன. வார்டுகளில் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து விடுவது வாடிக்கை. சில சமயங்களில் மெயின் பைப்லைன் உடைந்து விட்டால் இரண்டு, மூன்று நாட்கள் கூட தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. பைப் லைன் உடைந்த இடத்தின் வழியே குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்துவிடவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறான சிக்கல்களை அதே இடத்தில் சரிசெய்து கொள்ள வசதியாக, நடமாடும் கசிவு நீர் சரி செய்யும் வாகனம் (புளு ரிகேடு), நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்றாண்டு மே மாதம் ஈரோடு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 10 லட்சம் ரூபாய், மாநகராட்சி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த வாகனம் வாங்கப்பட்டது.

கசிவு நீர் சரிசெய்யும் வாகனத்தில் தண்ணீரில் உள்ள தாதுப்பொருள் கண்டறியும் கருவி, தண்ணீரில் மின்சாரம் அளவு கண்டறியும் கருவி, கழிவு நீர் கலந்துள்ள அளவைக் காட்டும் கருவி, குளோரின் அளவு பரிசோதனை செய்யும் கருவி, லேப்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப்புடன் இன்டர்நெட் இணைப்பு, பிரின்டர் கருவி, கம்ப்யூட்டரை இயக்க ஜெனரேட்டர்கள், மூன்று சுத்தி, சம்பட்டி, கடப்பாறை, பைப் கட்டர், பைப் ரின்ச், பிளம்பிங் கருவிகள், பத்து பேரிகாடு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கசிவுகளை சரி செய்ய, வாகனம் ஓட்ட என ஐந்து பேர் வாகனத்தில் இருப்பர். பைப் லைன் எங்காவது உடைந்து இருந்தால் அவர்களே சரி செய்து விடுவர். மாநகராட்சிக்கு வாகனம் வந்த போது இப்படித்தான் பெருமையாக அதிகாரிகள் கூறினர். ஆனால், வாகனம் வந்து பல மாதங்களாகிறது. மாநகராட்சி வளாகத்தை விட்டு இந்த வாகனம் வெளியே வந்ததேயில்லை. தூசி படிந்தும், வெயிலில் காய்ந்தும் பயனற்று கிடக்கிறது.

சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி இன்ஜினியர் வடிவேலிடம் கேட்டபோது, "வாகனத்தில் செல்வோருக்கு பயிற்சி அளிக்க மும்பையை சேர்ந்த ஒரு குழுவினர் வர உள்ளனர்.அவர்கள் பயிற்சி அளித்த பின் வாகனம் பயன்பாட்டுக்கு வரும்' என்றார். ஆனால், இதுவரை வாகனம் பயன்பாட்டுக்கு வரவேயில்லை. "புளு பிரிகேடு' வாகனம் தற்போது காந்திஜி ரோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதார அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் வரிப்பணம் 15 லட்சம் ரூபாய் வீணாகிவிடும்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:25
 

மாநகராட்சி இனங்கள் குத்தகை காலம் 3 ஆண்டாக நீட்டித்து ஆணை

Print PDF

தினமலர் 02.02.2010

மாநகராட்சி இனங்கள் குத்தகை காலம் 3 ஆண்டாக நீட்டித்து ஆணை

ஈரோடு: மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான குத்தகை காலம் நடப்பாண்டு முதல் மூன்றாண்டாக நீட்டித்து நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள தினசரி சந்தை, வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ் கட்டணம், பஸ் ஸ்டாண்டில் "டிவி' மூலம் விளம்பரம் செய்வது, வாகன ஸ்டாண்ட், மாநகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி, வணிக வளாக கடைகள், பூ வியாபார உரிமம், கட்டணக் கழிப்பிடம், பூங்காவில் உள்ள கட்டணக் கழிப்பிடம், ஆடு, மாடு வதை கூடம் உள்பட பல்வேறு இனங்களுக்கு ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்கும் குத்தகைதாரர்கள் இந்த இனங்களை ஓராண்டுக்கு அனுபவித்துக் கொள்ளலாம். மாநகராட்சி வருவாயின் பெரும்பங்கு இதன் மூலம் கிடைக்கிறது. மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான குத்தகை காலத்தை மூன்றாண்டுக்கு நீட்டித்து நகராட்சி நிர்வாகம் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள சந்தை, பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற இனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் 2009-10ம் ஆண்டு முதல் மூன்றாண்டுக்கு நீட்டித்து, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள அங்காடிகள், பஸ் ஸ்டாண்டு, சந்தைகள், மிதிவண்டி நிறுத்துமிடங்கள், கட்டண கழிப்பிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து இனங்களிலும் கட்டணங்கள் வசூலிக்கும் உரிமைக்கான குத்தகை கால அளவை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓராண்டில் இருந்து மூன்றாண்டுகளாக மாற்றியமைத்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாணை 2009-10ம் ஆண்டு முதலான குத்தகை இனங்களுக்கு மட்டுமே பொருந்தும். நடைமுறையில் உள்ள குத்தகை இனங்களுக்கு பொருந்தாது.

நடப்பு 2009-10ம் ஆண்டில் பல மாநகராட்சிகளில் ஆண்டுக் குத்தகை முடிவுற்ற பின்னரே 2009 மே 25ம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் மூன்றாண்டுகளுக்கு குத்தகை நிபந்தனைகளை திருத்தி அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விட வேண்டும். 2009-10 ஆண்டில் ஓராண்டுக்கு ஏலம் விடப்பட்ட இனங்களில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என குத்தகை உரிமம் நீட்டிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார

Last Updated on Tuesday, 02 February 2010 06:23
 


Page 682 of 841