Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பட்டுக்கோட்டையில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி

Print PDF

தினமலர் 01.02.2010

பட்டுக்கோட்டையில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை 28வது வார்டு ரயில்வே ஸ்டேஷன் சாலை நகராட்சி சுடுகாட் டில் ரூ.55 லட்சம் செலவில் எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் பர மேஸ்வரன் வரவேற்றார். கவுன்சிலர்கள் அண்ணாதுரை, ரகுராமன், திருச்செந்தில், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்தக்காரர் மாசிலாமணி, நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முத்துக்குமார் நன்றி கூறினார

Last Updated on Monday, 01 February 2010 06:30
 

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து

Print PDF

தினமலர் 01.02.2010

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும். இது பற்றி, மாநகராட்சியுடன் இணையும் வாய்ப்புள்ள அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து:எம்.ஜீவானந்தம் (தனியார் நிறுவன மேலாளர்): கொசுத்தொல்லை அவனியாபுரத்தில் அதிகம். காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவுகின்றன. இதை ஒழிக்க பாதாள சாக்கடை திட்டம் அவசியம். மாநகராட்சியுடன் இணைத்தால் தான் அது சாத்தியம். நலதிட்ட உதவிகள், தரமான ரோடுகள் தொய்வின்றி கிடைக்கும்.

என்.பால்பாண்டி (சட்டக்கல்லூரி மாணவர்): நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. குடிநீர் வினியோகம் சீராக இல்லை. மத்திய அரசின் பல திட்டங்கள், வார்டுகளுக்கு கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் மக்களிடம் முழுமையாக சேரவில்லை. உடனே மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும்.

எஸ்.பட்டாபிராமன் (பிராமணர் சங்க மாவட்ட ஆலோசகர்): அவனியாபுரத்தை பொறுத்தளவு, அதை இரு ஊராட்சிகளாக குறைக்க வேண்டும். இங்கு விவசாயம், மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. மாநகராட்சியாக மாறுவதால், வரிச் சுமை தான் கூடும்.

எஸ்.சிவக்குமார் ("பியூப்பிள் பார் அனிமல்ஸ்' செயலாளர்): இது வரவேற்க வேண்டிய விஷயம். மாநகராட்சிக்கு கிடைக்கும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் உடனடியாக நம்மை வந்தடையும். தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பு ஊசி போடும் திட்டத்தை சில மாநகராட்சிகள் சரிவர செய்தன. இந்த நகராட்சியில் அதற்கான இடம் இதுவரை ஒதுக்கவில்லை. மாநகராட்சியாக மாறினால், மனிதர்கள் மற்றும் பிராணிகள் நலன் காக்கலாம்.

ஆர்.தாமோதரன் (வில்லாபுரம்-அவனியாபுரம் வட்டார தொழில் வர்த்தக சங்க துணைதலைவர்): நகராட்சியிடம் பலமுறை பலரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தால் தான் சாக்கடை தள்ளும் பணியை நடக்கிறது. போதுமான ஆட்கள் இல்லை. வில்லாபுரத்திலிருந்து அவனியாபுரம் செல்லும் ரோடை ஒருவழிப் பாதையாக மாற்றவேண்டும். அதற்கு வில்லாபுரம் ஹவுசிங்போர்டு முடிவில் உள்ள ரோடை பயன்படுத்தலாம். மாநகராட்சியானால் நகர் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு அவனியாபுரம் வரும். போலீஸ் எண்ணிக்கை உயரும், போக்குவரத்துபிரிவு தனியாக செயல்பட்டு, விபத்துகளை தடுக்கலாம்.

பிரபு (டிராவல்ஸ் உரிமையாளர்): குடிநீரில் சாக்கடை கலப்பு, கலங்கலான குடிநீர் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பாதாள சாக்கடைதிட்டம் நிறைவேறினால், சுகாதாரம் சீராகும். தரமான ரோடுகள் கிடைக்கும். பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

பன்னீர் செல்வம் பெரியசாமிநகர் (திருப்பதிநகர் நலசங்க செயலாளர்): மாநகராட்சியாக மாறினால் தெருவிளக்கு
பராமரிப்பு சீராகும். இங்குள்ள உயர்நிலை பள்ளி பல ஆண்டுகளாக தரம் உயராமல் உள்ளது. மாநகராட்சி வசம் சென்றால் இது மேல்நிலை பள்ளியாக மாறும்.

ஜி.ஆறுமுகம் (டெய்லர்): குப்பை லாரிகள் "கவர்' போடாமல் செல்வதால், ரோட்டில் பைக் ஓட்ட முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்து செல்லும்போது கவனமாக செல்லவேண்டியுள்ளது. மாநகராட்சியாக மாறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் போக்குவரத்து அவனியாபுரத்தில் இருக்கும். குப்பை லாரிகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும்போது பிரச்னைகள் தீரும்.

யு.பாண்டி(ஏட்டு, ஓய்வு): மாநகராட்சியில் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் முறைகேடு என செய்தி வந்தது. அத்துடன் நல்ல வருமானம் வரும் அவனியாபுரம் நகராட்சியை சேர்த்தால் எப்படி? நகராட்சி நிர்வாகத்தினருக்கு பயிற்சிகள் கொடுத்து, சீர்படுத்தினால் நன்றாக இருக்கும். மாநகராட்சியுடன் இணைப்பு தேவை இல்லை.

Last Updated on Monday, 01 February 2010 06:27
 

ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில் தினமலர் செய்தி குறித்து விவாதம்

Print PDF

தினமலர் 01.02.2010

ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில் தினமலர் செய்தி குறித்து விவாதம்

ஆலந்தூர் : "செப்டிக்' டேங்க் கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடும் நட்சத்திர ஓட்டல்கள் குறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியும், இதுவரை ஓட்டல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆலந்தூர் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் "பழவந்தாங்கல் மக்கள், 2 கி.மீ., தூரம் சென்று நங்கநல்லூரில் மின் கட்டணம் மற்றும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழவந்தாங்கலிலேயே கட்டடங் களை கட்டித் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனம்பாக்கம் ரயில்வே சுரங்கப் பாலம் திறந்த பின், நேரு நெடுஞ்சாலையை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். படுமோசமாக இருக்கும் நேரு நெடுஞ் சாலையை சீரமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

"சில நட்சத்திர ஓட்டல்கள், மழைநீர் கால்வாயில் "செப்டிக் டேங்க்' கழிவுகளை இரவில் திறந்து விடுகின்றன. இதனால், ஆலந்தூர் பகுதி மக்களுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இது குறித்து, "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இரண்டு மாதங்களாகியும் நட்சத்திர ஓட்டல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கவுன்சிலர்கள் பாஸ் கரன், ராமதாஸ் ஆகியோர் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் துரைவேலு, "நட்சத்திர ஓட்டல்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைப் பதற்கு அவகாசம் கேட்டுள்ளனர். விரைவில் கழிவுநீர் மையத்தை அமைப்பதற் கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவர். அதற்குபின் அத்துமீறும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 06:21
 


Page 684 of 841