Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வள்ளலார் நினைவு தினம்: 30}ல் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினமணி 28.01.2010

வள்ளலார் நினைவு தினம்: 30}ல் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

கோவை, ஜன.27: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி வரும் சனிக்கிழமை (ஜன.30) இறைச்சிக் கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

வள்ளலார் நினைவு தினத்தன்று ஆடு, மாடு, கோழி வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட இறைச்சிக் கடைகளை மேற்குறிப்பிட்ட நாளில் மூட வேண்டும். அன்றைய தினம் கோவை மாநகராட்சியின் உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் ஆடு அறுவைமனைகள், சத்தி சாலையில் உள்ள மாடு அறுவைமனை செயல்படாது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 28 January 2010 10:21
 

மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை

Print PDF

தினமணி 28.01.2010

மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை

மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசுவதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த உத்தரவு மதுரை மாநகராட்சியிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் செல்போனை பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 28 January 2010 10:05
 

பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Print PDF

தினமணி 28.01.2010

பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பெங்களூர், ஜன,27: பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு வழக்கு மீதான தீர்ப்பை வியாழக்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அறிவித்தபடி பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுமா என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த

வார்டு இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்க உள்ள நிலையில், இட ஒதுக்கீடு வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டுவிடும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் தலைமை நீதிபதி பெஞ்ச் முன் பெங்களூர் மாநகராட்சி இட ஒதுக்கீடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இட ஒதுக்கீடு பிரச்னையில் பல்வேறு அம்சங்களை நீதிபதிகள் பரிசீலித்து வருவதால் தீர்ப்பை ஒரு நாள் நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

பெங்களூர் மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இட ஒதுக்கீடு வார்டு அடிப்படையில் அமைய வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு அறிவித்த இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வார்டு அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி பிப்ரவரி 21-ம் தேதி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த அப்பீல் மனுவை விசாரித்து, கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் அரசு அறிவித்த இட ஒதுக்கீடு அடிப்படையில் பெங்களூர் மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் இப்போது விசாரணையில் இருந்து வருகிறது.

Last Updated on Thursday, 28 January 2010 09:54
 


Page 689 of 841