Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.2.40 கோடியில் காரைக்குடி நகராட்சிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 27.01.2010

ரூ.2.40 கோடியில் காரைக்குடி நகராட்சிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடம் திறப்பு

காரைக்குடி,ஜன.25: காரைக்குடியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 5 நகராட்சிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் மற்றும் தாய்-சேய் நல விடுதிக்கான கட்டடத்தை தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ.80.10 லட்சத்திலும், சுபாஷ் நகர் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 31.90 லட்சத்திலும், சின்னைய அம்பலம் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 40.20 லட்சத்திலும்.

நல்லையன் ஆசாரி நகர்மன்றத் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25.33 லட்சத்திலும், ஆலங்குடியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 23.10 லட்சத்திலும், செஞ்சை நகர்மன்றத் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 21 லட்சத்திலும் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. செஞ்சையில் உள்ள நகராட்சி தாய்-சேய் நல மையம் ரூ. 18 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றன.

இதனை காரைக்குடி நகராட்சி சார்பில் ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிóல் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும் பேசியது:

இந் நகராட்சியில் 15 பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணியில் 5 கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் கொண்டு வர துணை முதல்வரைச் சந்தித்த்து தெரிவித்துள்ளோம். மேலும் ரூ.1.18 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளும், திருப்பத்தூர் பேரூராட்சியும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. சிவகங்கையில் ரூ. 97 கோடியில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக் கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

ஆட்சியர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்துப் பேசியது: அரசு நிதியை மட்டுமே எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் நிதியுடன் ஒரு பங்கு அரசு நிதி சேர்த்து நகரின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள தடையேதும் இல்லை. வரும் காலங்களில் நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

விழாவில், நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை பேசுகையில், காரைக்குடி நகராட்சியில் ரூ.24 கோடிக்கு பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க அமைச்சர் ஆவன செய்ய வேண்டும். காரைக்குடி நகர வளர்ச்சிக்காக நடப்பாண்டு சட்டப்பேரவை உறுப்பினர் தனது நிதியிலிருந்து ரூ. 75 லட்சத்தை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தர்.

காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம் பேசுகையில், நடப்பாண்டு சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.75 லட்சம் காரைக்குடி நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்குவதாக உறுதியளிக்கிறேன் என்றார்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப. துரைராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் லெ. வைரவன், நகராட்சிப் பள்ளிகளின் சார்பாக தலைமையாசிரியர் நா. காத்தமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார். ராமநாதன் செட்டியார் நகர்மன்றப் பள்ளி மாணவ, மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் முத்து. பழனியப்பன், பேராசிரியர் அய்க்கண், நகராட்சிப் பொறியாளர் எஸ். மணி, இளநிலைப் பொறியாளர் எம். வேலுச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 08:45
 

குடியரசு தின விழாவில் 35 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி

Print PDF

தினமணி 27.01.2010

குடியரசு தின விழாவில் 35 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி

தக்கலை, ஜன. 26: பத்மநாபபுரம் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 35 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் ஏற்றினார். பின்னர் நடைபெற்ற விழாவில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதி உதவித் திட்டத்தின் கீழ் 35 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் அதற்கான காசோலைகளை நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் ஆணையர் செல்லமுத்து, சுகாதார அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் முகமதுசலீம், உறுப்பினர்கள், விஜயகோபால், பீனா, ஹரிகுமார், முகமதுரஷீது, முகமதுராபி, முகமது உவைஸ், உண்ணிகிருஷ்ணன், ரேணுகா, மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மோகன், மில்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட தடயங்கள் பண்பாட்டுக் கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு துணைத் தலைவர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் தேசியக் கொடியை ஏற்றினார் ரெவரன்ட் டென்னிசன் இனிப்புகளை வழங்கினார். இதில், நிறுவனர் தர்மராஜ் மற்றும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தடிக்காரன்கோணம் ரூபன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ரூபன் கல்வி நிறுவனச் செயலர் சந்திரகாலா ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில், ரூபன் மெட்ரிக் பள்ளி முதல்வர் அர்னால்டு-டி- ஜோசப், பி.எட். கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய தங்கம், விரிவுரையாளர் நிர்மல் தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆர்.டி.. முருகவேல் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடியை வட்டாட்சியர் பால்சுந்தர்ஜான் ஏற்றிவைத்தார் இதில், தக்கலை கிராம அலுவலர் தங்கதுரை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) லீலாபாய் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் பொன்.பால் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நகர்மன்றத் தலைவர் ரேவன்கில், ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி பிரபகுமார் தலைமையில் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில், சாரண சாரணியர், மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்றனர்.

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை கல்லூரித் தாளாளர் எச்.முகமது அலி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் வி.எபனேசர் தலைமை வகித்தார். இதில், கல்லூரித் தலைவர் எஸ்.செய்யது முகமது, கல்லூரி நிர்வாக நிதிக் காப்பாளர் அப்துல்ரஹீம், கல்லூரி செயற்குழு உறுப்பினர் யூசப், பெரோஷ்கான் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி 27.01.2010

மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி, ஜன. 26: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், எம்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை குடியரசு தினவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தேசிய கொடியேற்றினார். துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை தேசியக் கொடியேற்றினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில், அதன் இயக்குநர் பி. பிரபாகரன் தேசிய கொடியேற்றினார். மற்றொரு இயக்குநர் டி. ராஜகுமார், வங்கியின் பொதுமேலாளர்கள் எஸ். செல்வன் ராஜதுரை, கே.பி. நாகேந்திர மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், அதன் தலைவர் பி. கதிர்வேல் தேசிய கொடியேற்றினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ். ஜஸ்டின் தேசிய கொடியேற்றினார். தூத்துக்குடி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில், துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தேசிய கொடியேற்றினார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், அதன் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலர் எம். சொக்கலிங்கம் தேசிய கொடியேற்றினார். மாவட்ட தலைவர் ஏ.எம்.டி. வேல்முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தூய இன்னாசியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் அருள்தந்தை ஆஸ்வால்ட் தலைமை வகித்தார். தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்வியியல் கல்லூரி செயலர் ஏ. ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதன் செயலர் ஆறுமுக கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

தூத்துக்குடியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் அதன் காப்பாளர் த. எபனேசர் டேனியல் தனராஜ் தேசிய கொடியேற்றினார். மாணவர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 08:10
 


Page 692 of 841