Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை மாநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி 27.01.2010

நெல்லை மாநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ÙS¥ÛX UÖSLW Th‡›¥ hzVWr ‡]«ZÖ ÚS¼¿ ÙLցPÖPTyP‰.ÙS¥ÛX UÖSLWÖyp A¨YXL†‡¥ hzVWr ‡]«ZÖ ÚS¼¿ ÙLցPÖPTyP‰. ÚUVŸ H.G¥.r‘WU‚VÁ ÚRpV ÙLÖz H¼½]ÖŸ. ÙRÖPŸ‹‰ ÙS¥ÛX UÖSLWÖyp T•¸ UÖQY-UÖQ«L¸Á LÛX ŒL²opL• SP‹R‰. ‘Á]Ÿ 100 NR®R• ÚRŸop ÙT¼\ T•¸Lºeh T¡r YZjLTyP‰. «Û[VÖy| ÚTÖyz, ÚTor ÚTÖyz›¥ ÙY¼½ UÖQYŸLºeh ÚUVŸ H.G¥.r‘WU‚VÁ T¡r YZjf]ÖŸ. p\‹R T•¸L• ÚRŸ° ÙNšVTy| T¡rL• YZjLTyP].

ŒL²op›¥ UÖSLWÖyp BÛQVÖ[Ÿ TÖÍLWÁ, ÙTÖ½VÖ[Ÿ Ù^š ÚN«VŸ, ŒŸYÖL ÙTÖ½VÖ[Ÿ SÖWVQ SÖVŸ, UPX RÛXYŸL• rT. qRÖWÖUÁ, «rYSÖR TցzVÁ, r‘WU‚VÁ, GÍ.GÍ.ÛUˆÁ U¼¿• A‡LÖ¡L• LX‹‰ ÙLցP]Ÿ.

UPX A¨YXL•

TÖÛ[VjÚLÖyÛP UPX A¨YXL†‡¥ UPX RÛXYŸ rT.qRÖWÖUÁ ÙLÖz H¼½]ÖŸ. ŒL²op›¥ ER« BÛQVÖ[Ÿ A.r¥RÖ]Ö LX‹‰ ÙLցPÖŸ. ÙS¥ÛX P°Á U£†‰YUÛ] Y[ÖL†‡¥ UPX RÛXYŸ «rYSÖR TցzVÁ ÙLÖz H¼½]ÖŸ. ER« BÛQVŸ (ÙTÖ¿") TÖÍLŸ LX‹‰ ÙLցPÖŸ.

ÚUXTÖÛ[V• UPX A¨YXL†‡¥ UPX RÛXYŸ GÍ.GÍ.˜LU‰ ÛUˆÁ ÙLÖz H¼½]ÖŸ. RoNS¥©Ÿ UPX A¨YXL†‡¥ UPX RÛXYŸ r‘WU‚VÁ ÙLÖz H¼½]ÖŸ. ŒL²op›¥ ER« BÛQVÖ[Ÿ (ÙTÖ¿") ‰.L£TNÖ-, L°ÁpXŸL• L‹RÁ, ÙTÖÁ.RjLWÖÇ, TÖXr‘WU‚VÁ, LÚQNÁ E•TP TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.

LÖjfWÍ

ÚTyÛP ÙNeLz ÙWÖyzLÛP TÍ Œ¿†R†‡¥ LÖjfWÍ NÖŸ‘¥ SP‹R ŒL²op›¥ WÖUr" G•.‘., ˜Á]Ö• U†‡V U‹‡¡ RÄÐÚLÖz B‡†RÁ BfÚVÖŸ ÚRpzV ÙLÖz H¼½]Ÿ. ‘\h Ajh•[ LÖUWÖ^Ÿ pÛXeh UÖÛX A‚«eLTy|, C"L• YZjLTyP]. AÚTÖ‰ T¥ÚY¿ LypÛV ÚNŸ‹RYŸL• LÖjfWÍ Lyp›¥ CÛQ‹R]Ÿ.

T¥LÛXeLZL•

ÙS¥ÛX UÚ]ÖÁU‚V• r‹RW]ÖŸ T¥LÛXeLZL†‡¥ ÚS¼¿ LÖÛX T¥LÛXeLZL ‰ÛQÚY‹RŸ CWÖ.‡.NTÖT‡ÚUÖLÁ ÚRpV ÙLÖz H¼½]ÖŸ. ˜Á]RÖL ÚRpV UÖQYŸ TÛP A‚Yh" U¡VÖÛRÛV ‰ÛQÚY‹RŸ H¼¿ ÙLցPÖŸ. ŒL²op›¥ T¥LÛXeLZL T‡YÖ[Ÿ UÖ‚eL•, ÙRÖPŸ L¥« CVeh]Ÿ U‚ehUÖŸ, ÚRŸ° Ly|TÖy| A‡LÖ¡ ÚU^Ÿ ‰ÛWWÖÇ U¼¿• UÖQY-UÖQ«L• LX‹‰ ÙLցP]Ÿ.

ÙS¥ÛX UÖYyP TtNÖV†‰ A¨YXL†‡¥ TtNÖV†‰ RÛXYŸ fWLÖ•ÙT¥ ÙLÖz H¼½]ÖŸ. ŒL²op›¥ TtNÖV†‰ ÙNVXÖ[Ÿ ÚLÖ.h£SÖRÁ, TtNÖV†‰ L°ÁpXŸL• U¼¿• A¨YXL T‚VÖ[ŸL• LX‹‰ ÙLցP]Ÿ.

Last Updated on Wednesday, 27 January 2010 08:06
 

சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு சீல்: சுகாதாரத் துறை செயலர் பாராட்டு

Print PDF

தினமலர் 27.01.2010

சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு சீல்: சுகாதாரத் துறை செயலர் பாராட்டு

சென்னை : சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு, "சீல்' வைத்த சென்னை மாநகராட்சியின் செயல் பாட்டுக்கு, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்தார்.குடியரசு தினத்தையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவமனை குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறை சார்பில்,"பழக்க வழக்கங்களும், ஜீரண மண்டல உபாதைகளும்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தியது.மாநிலம் முழுவதும் இருந்து 48 பேர் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி அபர்ணா, சென்னை மருத்துவ கல்லூரி மாணவி வித்யா, இருங்காட்டுக்கோட்டை கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவி சபிதா ஆகியோரின் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டன.

நேற்று நடந்த விழாவில், சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவியருக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் விருது மற்றும் நற் சான்றுகளை வழங்கி பேசும்போது, ""மன அழுத்தம் ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா பயிற்சி செய்ய வேண்டும். அரசு பொது மருத்துவ மனை உள் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.தமிழகம் முழுக்க 1,238 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன கருவிகள் வாங்கப் பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மருந்து, மாத்திரைகள் வாங்கப் பட்டுள்ளன.மக்கள், நோய் வராமல் தவிர்க்க நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.

சுகாதார துறை செயலர் சுப்புராஜ் பேசும்போது, ""நோய் வராமல் தடுக்க, சுத்தமான உணவு வகைகளை உட் கொள்ள வேண்டும். சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில், மாநகராட்சியினர் அதிரடியாக சோதனை மேற் கொண்டனர். சுகாதாரம் இல்லாத ஓட்டல்களுக்கு, "சீல்' வைத்தனர்.தலைமை செயலகத்திலேயே நுழைந்து, அங்கிருந்த சுகாதாரமில் லாத கேன்டீன்களை மூடினர். மாநகராட்சியின் இந்த செயல் பாராட்டத் தக்கது. மாநகராட்சியின் செயல்பாடு ஓட்டல் நடத்துவோருக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும்'' என்றார்.அரசு பொது மருத்துவமனையின் டீன் மோகனசுந்தரம், துணை முதல்வர் சுந்தரம், குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறைத் தலைமை டாக்டர் சந்திரமோகன் உள்ளிட் டோர் விழாவில் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 06:55
 

இடம் ஒதுக்கீடு : நடைபாதை வியாபாரிகளுக்கு மாநகராட்சி கணக்கெடுப்பு

Print PDF

தினமலர் 27.01.2010

இடம் ஒதுக்கீடு : நடைபாதை வியாபாரிகளுக்கு மாநகராட்சி கணக்கெடுப்பு

கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக நடை பாதையில் வியாபாரம் செய்வோருக்கு, மாநகராட்சி நிர்வாகம் இடவசதி செய்து தர கணக்கெடுப்பு நடத்துகிறது.தேசிய தெரு வியாபாரிகள் கொள்கையை 2004 ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. அனைத்து மாநிலங்களிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் கொள்கையை பின்பற்ற உத்தரவு பிறப்பித்தது.முக்கிய நகரங்களிலுள்ள தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் நலன் கருதி இக்கொள்கையை நிறைவேற்றியது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாநில அரசு இக்கொள்கையை செயல்படுத்த உத்தரவிட்டது.பெரும்பாலான மாநிலங்களில் இக்கொள்கை செயல்படுத்தப்படவில்லை. கோவை மாநகராட்சி இக்கொள்கையை கடைபிடித்து அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கான சிறப்பு திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.கோவை மாநகராட்சி எல்லையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் , முக்கிய ரோடுகள், தெருக்கள், டைபாதையில் கடைவிரித்து வியாபாரம் செய்கின்றனர். நிரந்தர வியாபாரம் செய்வோர், சீசனுக்கு ஏற்ப பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர், வெளியூரிலிருந்து வந்து வியாபாரம் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியும், "கோவை ஐ.சி.சென்டர் பார் இ-கவர்னான்ஸ்' என்னும் தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய திட்டத்தை உருவாக்கியது.வியாபாரிகள் குறித்த தகவல்களை சேகரிப்பது, போட்டோ எடுப்பது, ஒவ்வொரு வியாபாரிக்கும் டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கீரை, பால் விற்பனை செய்பவர்கள், காலை 11.00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட்களில் காபி, டீ விற்பனை செய்பவர்கள், இது தவிர இளநீர், தர்பூசணி, பப்பாளி விற்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.இத்திட்டம் குறித்து ".சி.சென்டர் பார் இ-கவர்னான்ஸ்' நிர்வாகிகள் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரத்தில் வியாபாரம் செய்வோருக்கு பலன் கிடைக்கும். தெருவியாபாரிகள் இது வரை எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இன்று இந்த இடம், நாளைக்கு வேறு இடம் என்ற அடிப்படையில் வியாபாரம் செய்து வந்தனர்.வியாபாரம் மேற்கொள்ளும் தெரு வியாபாரிகள் அனைவரையும் இணைத்து மாநகராட்சி பகுதிக்குள் பெரிய டம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அங்கு பொதுமக்கள் தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கு வசதி செய்யப்படும்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு குறையும். அதே சமயம் பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும். அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.தெருவோர கடை நடத்தும் வியாபாரிகள் கூறியதாவது:மாநகராட்சி இலவசமாக இத் திட்டத்தை செய்து கொடுக்காது. மறைமுகமாக வருவாய் ஈட்டுவதற்கு பார்க்கிறது. மாநகராட்சி இவ்வளவு ஏற்பாடும் செய்கிறதென்றால், ஒரு கடைக்கு குறைந்த பட்ச வாடகையை நிர்ணயம் செய்யும். வாடகை ஏதும் இல்லாமல், பெரிய முதலீடு இல்லாமல் அன்றாடம் வருவாய் ஈட்டி வருகிறோம். பொதுமக்களின் பார்வை, விற்பனை செய்யும் பொருள் மீது பட்டால் மட்டுமே, எங்களுக்கு வருவாய் கிடைக்கும். பார்வையில்லாத ஏதோ ஒரு பகுதியில் கடை அமைத்துக்கொடுத்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து எங்கள் சங்கத்தில் விவாதித்து முடிவு எடுப்போம் என்று கூறினர்.இது குறித்து அடுத்த மாதம் கருத்துக்கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு,விருப்பப்படும் வியாபாரிகளுக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக லைசன்ஸ் வழங்க மாநகராட்சி திட்டமிட் டுள்ளது.அன்றாடம் மாமூல் கொடுக் கும் வியாபாரிகளுக்கு, ஜாக் பாட் அடித்ததாக ஒரு தரப்பு கூறுகிறது.மற்றொரு தரப்பு வியாபாரிகளை வைத்து சூதாட்டம் நடத்துவதாக மாநகராட்சியை குற்றம் சொல்கிறது.இத்திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்றுமா அல்லது தள்ளி வைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Last Updated on Wednesday, 27 January 2010 06:48
 


Page 693 of 841