Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரவக்குறிச்சி மளிகை கடைகளில் எண்ணெய் வகைகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 27.01.2010

அரவக்குறிச்சி மளிகை கடைகளில் எண்ணெய் வகைகள் திடீர் ஆய்வு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சிப் பகுதியிலுள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் உணவு எண்ணெய்கள் குறித்து சுகாதாரத் துறையினர திடீர் ஆய்வு நடத்தினர். கரூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதாசிவம் உத்தரவின் பேரில், பள்ளப்பட்டி, அண்ணாநகர், மலைக்கோவிலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் விற்கப்படும் உணவு எண்ணெய் வகைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, தரமானதாக உள்ளதா?, தயாரிப்பு விபரம், காலாவதி தேதி ஆகியவைகள் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், சுகாதார ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர். இதில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றில் சந்தேகப்படும் படி இருந்த, எண்ணெய்கள் மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு ஆய்வக் கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான தரமற்ற எண்ணெய் உபயோகிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆய்வின் போது காலாவதியான மூவாயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள எண்ணெய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கலப்பட எண்ணெய் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

Last Updated on Wednesday, 27 January 2010 06:40
 

நாளை கூடுகிறது மாநகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 27.01.2010

நாளை கூடுகிறது மாநகராட்சி கூட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை நடக்கிறது. அதில், வீதியில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கும் தீர் மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு வரும் தமிழர்கள், பனியன் நகரமான திருப்பூருக்கும் வர வாய்ப்புள்ளதால், இந்நகரை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீதியில் குப்பை கொட்ட தடை விதிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய் துள்ளது.இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை கூடுகிறது. அக் கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கட்சி கவுன்சில் குழு தலைவர்களுடன் மேயர் செல்வராஜ் இன்று ஆலோசிக்கிறார். அதன்பின், மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட உள்ளது.

Last Updated on Wednesday, 27 January 2010 06:39
 

விக்கிரமசிங்புரம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா

Print PDF

தினமலர் 27.01.2010

விக்கிரமசிங்புரம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா

விக்கிரமசிங்கபரம்:விக்கிரமசிங்புரம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி துணை தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் இசக்கிபாண்டியன், கண்ணன், ஜெயபிரகாஷ் உட்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 06:31
 


Page 694 of 841