Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

விழுப்புரம் நகரத்தில் திறன் மிகுந்த சி.எப்.எல்., தெரு மின் விளக்குகள்

Print PDF

தினமலர் 25.01.2010

விழுப்புரம் நகரத்தில் திறன் மிகுந்த சி.எப்.எல்., தெரு மின் விளக்குகள்

விழுப்புரம் : விழுப்புரம் நகரத்தில் அதிக வெளிச்சமும், மின் சிக்கனம் அளிக்கும் சி.எப். எல்., தெருமின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது.

விழுப்புரம் நகரத்தில் குறைந்த மின் செலவில் அதிக வெளிச்சத்தை தரக் கூடிய சி.எல்.எப்., தெரு மின் விளக்குகள் பொருத் தும் பணிகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப் பட் டுள்ளது. இதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் சி.எப். எல்., பல்புகள் வாங்கப்பட்டு நகராட்சி வார்டுகள் முழுவதும் பொருத்தப்பட்டு வருகிறது. குபேர வீதியில் இருந்த டியூப்லைட்டுகளை மாற்றி சி. எல்.எப்., பல்புகள் பொருத்தும் பணிகளை சேர்மன் ஜனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். நகராட்சி பொறியாளர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், ரகுபதி, சுரேஷ்பாபு, கம்பன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:37
 

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து

Print PDF

தினமலர் 25.01.2010

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.

மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும். இது பற்றி, மாநகராட்சியுடன் இணையும் வாய்ப்புள்ள திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து:

கே.கலைவாணி (கல்லூரி மாணவி): மாநகராட்சியுடன் இணைந்தால் குடிநீர் உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இத்திட்டம் இருக்க வேண்டும்.

எஸ்.சண்முகம் (பேராசிரியர்): பெரிய நகரங்களை விரிவாக்குவதைவிட சிறிய ஊர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம். மாநகராட்சியாகி விட்டால் பணிகள் நடக்காது, திணிக்கப்படும்.

எம்.கருப்பசாமி (விரிவுரையாளர்): மாநகராட்சியுடன் இணைந்தால் அதிகாரிகளை அணுகுவது கடினம். முக்கியமாக சுகாதாரத்துறை செயல்இழந்துவிடும்.

எஸ்.விக்னேஷ் (கல்லூரி மாணவர்): வரிகள் அதிகரிக்கும். திருப்பரங் குன்றத் தில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்படுவர்.

கு.பால்பாண்டியன் (வர்த்தக சங்க தலைவர்): மாநகராட்சியுடன் இணைத்தால் அதிக சலுகைகள் பெறலாம். பாதாள சாக்கடை, குடிநீர், நவீன கழிப்பறைகள் வசதிகள் கிடைக்கும். தற்போது இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நூலகத்திற்கு வசதியாக கட்டடம் கிடைக்கும். வங்கிகள் திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக திருநகரில் செயல்படுகின்றன. மாநகராட்சியாகிவிட்டால், அவை திருப்பரங்குன்றத்திற்கு வரும்.

ஜி.ரவி (வக்கீல்): தற்போதுவரை திருப்பரங்குன்றம் நகராட்சி பகுதிகள் போதிய வளர்ச்சியடையவில்லை. மாநகராட்சியுடன் இணைந்துவிட்டால், உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதிகள் அதிகம் கிடைக்கும். ஊர் வளர்ச்சிபெறும். நிலங்களின் விலை உயரும். மக்களை பாதிக்காத வகையில், மாநகராட்சியுடன் இணைவது நல்லது.

ஆர்.ராமதாஸ் (பெட்டிக்கடை): நகராட்சியாகவே இருப்பது நல்லது. மாநகராட்சியானால், வீட்டுவரி உட்பட அனைத்து வரிகளும் அதிகரிக்கும். மாநகராட்சி பகுதிகளிலேயே தற்போது பணிகள் சரிவர நடப்பது இல்லை. அதன் எல்லை விரிவடைந்தால், மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி விரிவாக்க பகுதிகளிலும் பணிகள் நடக்காமல், நிர்வாகம் முடங்கிப்போகும்.

செ.ராமமூர்த்தி (விவசாயி): நகராட்சி என்ற அந்தஸ்தை விடுத்து பேராட்சியாக மாற்றினால்கூட நல்லதுதான். திருப்பரங் குன்றம் அதிக அளவு விவசாயிகள் நிறைந்த பகுதி. தற்போது எங்களுக்கு அரசின் உழவர் அட்டை கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் துன்புறும்போது எங்களுக்கு கிடைக்க வேண்டிய அல்லது அரசு எங்களுக்கு கொடுக்கும் உதவிகளை இப்பகுதியினர் பெற முடியவில்லை. மாநகராட்சியாகிவிட்டால், இங்குள்ள அனைத்து நிலங்களிலும் வீடுகள் கட்டப்பட்டுவிடும். விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். தற்போதுள்ள நிலையில் ஒரு போக விவசாயத்திற்கு போதுமான தண்ணீரை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வருவதில்லை. மாநகராட்சி ஆகிவிட்டால், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்?

.வாசுகி(குடும்பத்தலைவி): தற்போது தெருக்களில் உள்ள குறைகளை இந்த வார்டில் குடியிருக்கும் கவுன்சிலரிடம் தெரிவிக்கிறோம். மாநகராட்சியாகிவிட்டால், கவுன்சிலரை கண்டுபிடிப்பதே அபூர்வமாகிவிடும். மண்டலங்களாகி
விடும். அலைச்சல் அதிகரிக்கும்.

எஸ்.சீனிவாசன் (வர்த்தகர்): மாநகராட்சியானால் அனைத்து வரிகளும் மூன்றுமடங்காக உயரும். அதற்கேற்ற வருமானம் அதிகரிக்காது. நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவோம். அனைத்திலும் லஞ்சம் அதிகரிக்கும்.

எம்.முத்துராமலிங்கம் (மார்க்கெட் சங்க தலைவர்): அனைத்து காய்களின் விலைகளும் உயரும். ஏலத்தில் போட்டிகள் அதிகரித்து, தொகை அதிகரிக்கும். ஏலம் எடுத்தவர்கள் வாடகையை உயர்த்துவர். வியாபாரிகள் அந்த சுமையை பொதுமக்களிடம்தான் திணிக்க வேண்டிவரும்.

Last Updated on Monday, 25 January 2010 06:32
 

குப்பையில் காளான், காய்கறி உற்பத்தி: கலக்குது கூடலூர் பேரூராட்சி

Print PDF

தினமலர் 22.01.2010

குப்பையில் காளான், காய்கறி உற்பத்தி: கலக்குது கூடலூர் பேரூராட்சி

பெ.நா.பாளையம் : வீடுகளில் கழிவாக தூக்கி எறியப்படும் குப்பையில் இருந்து உரம், காய்கறி மற்றும் காளான் உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையில் சாதித்து கொண்டிருக்கிறது கூடலூர் பேரூராட்சி.

கூடலூர் பேரூராட்சியில் 35 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 9361 வீடுகள், 120 வியாபார கடைகள் ற்றும் நிறுவனங்கள், 12 தொழிற்சாலைகள், எட்டு ஊராட்சி பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, ஏழு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து மாதம் ஏழு டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பையை தரம் பிரித்து வீடு தோறும் சேகரிக்கவும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 10 வார்டுகளில் உள்ள 6,533 வீடுகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மட்காத குப்பை மறுசுழச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. மட்கும் குப்பையை பயன்படுத்தி இயற்கை உரம், பஞ்ச காவ்யா கலவை, மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான கிடங்கு 1.5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு மூன்று "டன்' உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம், கலவை உரம் என இரு வகை தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாடு கட்டுப்பாடு வாரியத்தின் தடையின்மை சான்றும் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டம் தவிர, வீட்டு பின்புறத்தில் சமையல் கழிவை கொண்டு உரம் தயாரிக்கும் முறையும் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரான இயற்கை உரத்தை பயன்படுத்தி "காம்போஸ்ட் பூங்கா' பகுதியில் வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், கலவை உரம், வைக்கோல் கொண்டு காளான் உற்பத்தி பிரிவும் துவக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை துவக்க விழா நேற்று முன் தினம் நடந்தது. காளான் விற்பனையை, கூடலூர் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல்அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 22 January 2010 07:40
 


Page 696 of 841