Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்

Print PDF

தினமலர் 07.01.2010

மாநகராட்சி ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையில், சுப்பையா முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் முருகேசன், தென்கரைசாமி, வைகுண்ட நாராயணன், தித்தோணிஸ் மஸ்கரனாஸ், ராமசாமி ஆகியோர் பேசினர். முத்துச்சாமி நன்றி கூறினார். தமிழக முதல்வர் புதிய ஊதியம் / புதிய ஓய்வூதியம் 01.01.2006 முதல் அமுல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். உழைத்து ஓய்ந்த ஓய்வூதியர்களின் குடும்ப நலன் கருதி ஓய்வூதிய திருத்தத்தால் ஏற்படும் பணப்பயன்களை 01.01.2006 முதல் வழங்க உத்திரவிடவும், வயதில் மூத்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தினை அவர்கள் வயதெய்திய நிலையில் மத்திய அரசு ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டது போல், தமிழக அரசு உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கும் இச்சலுகையினை வழங்கிடவும், 15.09.1989 முதல் அனைத்து நகராட்சி அலுவலர்களையும் அரசு ஊழியர்களாக்கி பிறப்பிக்கப்பட்ட உத்திரவு முந்தைய அரசினரால் ரத்து செய்யப்பட்டு விட்டது. ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்து நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களையும் அரசு ஊழியர்களாக்கிடவும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Thursday, 07 January 2010 06:45
 

ரோடுகளில் மாடு தொல்லையா செல்போனில் புகார் செய்யலாம்:தி.மலை சேர்மன் தகவல்

Print PDF

தினமலர் 07.01.2010

ரோடுகளில் மாடு தொல்லையா செல்போனில் புகார் செய்யலாம்:தி.மலை சேர்மன் தகவல்

திருவண்ணாமலை:தி.மலை ரோடுகளில் இடையூறாக மாடுகள் உலா வந்தால் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார். தி.மலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக ரோடுகளில் உலா வரும் மாடுகளை தொடர்ந்து பிடிக்கும் பணி தொடர்பாக நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நகர நல அலுவலர் ராம்குமார், பிராணிகள் வதை தடுப்பு சங்க செயலாளர் நரசிம்மன், பொருளாளர் அரவிந்த்குமார், டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எக்ஸ்னோரா மாநில செயலாளர் இந்திரராஜன், பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகி ஆர்த்தீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கைலேஷ்குமார், அன்பழகன், நாகராஜன், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் சேட்டுமுருகேசன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மலை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை தொடர்ந்து பிடிக்கவும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

முதல் முறையாக மாடுகள் பிடிபட்டால் 3 நாட்களுக்குள் அவைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மாடுகள் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் மூலம் வேலூரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.இனி தி.மலையில் உலா வரும் மாடுகளை நகராட்சி மற்றும் போலீஸ் ஒத்துழைப்புடன் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் பிடிக்கவும் முடிவு செய்யப் பட்டது.

மேலும் தி.மலை நகரில் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்தால் உடனடியாக அது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்களை 93442 89438, 93442 89439, பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினரை 98401 22654 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மாடுகள் பிடிக்கப்படும். எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரியும் வகையில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் ரோடுகளில் விடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:41
 

பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க கூட்டம்

Print PDF

தினமலர் 07.01.2010

பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க கூட்டம்

அவிநாசி: திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சங்க கூட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில், ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.மாவட்ட தலைவராக இருந்த சதாசிவம் ஓய்வு பெற்றமைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்புநாதன் சிறப்புரையாற்றி, சதாசிவத்துக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.புதிய மாவட்ட தலைவராக சின்னப்பன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், தணிக்கையாளர் குணசேகரன், ஈரோடு மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் மலையமான் திருமுடிக்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 07 January 2010 06:29
 


Page 713 of 841