தினமலர் 07.01.2010
மாநகராட்சி ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையில், சுப்பையா முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் முருகேசன், தென்கரைசாமி, வைகுண்ட நாராயணன், தித்தோணிஸ் மஸ்கரனாஸ், ராமசாமி ஆகியோர் பேசினர். முத்துச்சாமி நன்றி கூறினார். தமிழக முதல்வர் புதிய ஊதியம் / புதிய ஓய்வூதியம் 01.01.2006 முதல் அமுல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். உழைத்து ஓய்ந்த ஓய்வூதியர்களின் குடும்ப நலன் கருதி ஓய்வூதிய திருத்தத்தால் ஏற்படும் பணப்பயன்களை 01.01.2006 முதல் வழங்க உத்திரவிடவும், வயதில் மூத்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தினை அவர்கள் வயதெய்திய நிலையில் மத்திய அரசு ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டது போல், தமிழக அரசு உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கும் இச்சலுகையினை வழங்கிடவும், 15.09.1989 முதல் அனைத்து நகராட்சி அலுவலர்களையும் அரசு ஊழியர்களாக்கி பிறப்பிக்கப்பட்ட உத்திரவு முந்தைய அரசினரால் ரத்து செய்யப்பட்டு விட்டது. ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்து நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களையும் அரசு ஊழியர்களாக்கிடவும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.