Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராக மேயர் கார்த்தியாயினி நியமனம்

Print PDF

தினத்தந்தி          30.11.2013

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராக மேயர் கார்த்தியாயினி நியமனம்

திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுவில் ஆட்சி மன்ற குழுவினர் உள்பட ஏற்கனவே 63 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான பழனியப்பன் பரிந்துரையின்பேரில் மேயர் கார்த்தியாயினி, விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் செந்தில்குமார் ஆகியோர் கல்விக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

 

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி             29.11.2013

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

லால்குடியில் நடந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் சுதாராணி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கரோலின், வட்டார மருத்துவ அலுவலர் பிரபா முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூக்கன், மருத்துவ வள மேற்பார்வையாளர் சாமிதுரை, சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆனந்த், சமுதாய சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் பாண்டியன் வரவேற்றார். நிறைவில் சுகாதார ஆய்வாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

 

திருவள்ளுவர் பல்கலை. கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மேயர் நியமனம்

Print PDF

தினமணி             29.11.2013

திருவள்ளுவர் பல்கலை. கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மேயர் நியமனம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி.பழனியப்பன் பரிந்துரையின் பேரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர்களாக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி மற்றும் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிச் செயலர் எஸ்.செந்தில்குமார் ஆகியோரை அரசு நியமித்துள்ளது.

இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். இவர்கள் இருவரின் நியமனத்தை அடுத்து பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 65-ஆக உள்ளது என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.குணசேகரன் தெரிவித்தார்.

 


Page 73 of 841