Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குளங்களை சீரமைக்க மாநகராட்சிக்கு அனுமதி: முதல்வருக்கு மேயர் நன்றி

Print PDF

தினமணி 02.01.2010

குளங்களை சீரமைக்க மாநகராட்சிக்கு அனுமதி: முதல்வருக்கு மேயர் நன்றி

கோவை, ஜன.1: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி கொடுத்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு, மேயர் ஆர்.வெங்கடாசலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி: கோவை மாநகராட்சி எல்லையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், முத்தண்ணம் குளம், பெரியகுளம், நரசம்பதி குளம்,

செல்வசிந்தாமணி குளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களை 90 ஆண்டுகளுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் மாநகராட்சி வசம் ஒப்படைத்து சீரமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் இக் குளங்களை புனரமைத்து மழைநீர் சேகரித்தல் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக் குளங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் மேற்கொள்ளப்படும்.இதற்கு அனுமதி அளித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மாநகராட்சி விரிவு: வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயரும்?

Print PDF

தினமணி 31.12.2009

சென்னை மாநகராட்சி விரிவு: வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயரும்?

சென்னை, டிச. 30: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்படுவதன் மூலம், வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயர வாய்ப்பு உள்ளது. இப்போது சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன.

உத்தேசிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்படும் என்று தெரிகிறது. சென்னை மாநகராட்சி விரிவுபடுத்துவதன் மூலம் மக்கள் தொகை 80 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 9 நகராட்சிகளும், புழல், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளும், 25 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.

மாநகராட்சியின் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல் மற்றும் வார்டுகளை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்வார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள தேவைப்பட்டால் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்துக்கொள்ள ஆணையருக்கு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிச. 31) நடைபெறவுள்ள சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இந்த அரசாணை பதிவு செய்யப்பட உள்ளது. அதன் பிறகு அதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தனிக் குழு: விரிவுபடுத்தப்படும் சென்னை மாநகராட்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள துணை ஆணையர் அளவில் உள்ள அதிகாரி ஒருவரை, சிறப்பு அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் நியமிப்பார் என்று தெரியவந்துள்ளது.

இந்த சிறப்பு அதிகாரியின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி, முதுநிலை திட்டப் பொறியாளர், சுகாதார அதிகாரி, கல்வித் துறை அதிகாரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள பகுதிகளில் எவ்வளவு பள்ளிகள், எங்கெங்கு அமைந்துள்ளன, சொத்துவரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது, மருத்துவமனைகள் எவ்வளவு உள்ளன, புது மருத்துவமனைகள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளின் பணி மூப்பு, மண்டல அலுவலகங்கள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வர்.

மேலும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் வார்டுகளை பிரிப்பது மற்றும் மாநகராட்சி கவுன்சிலில் புதிதாக எவ்வளவு கவுன்சிலர்களை சேர்க்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்வர்.

இந்த முடிவுகள் அறிக்கையாக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். பின்னர் திட்டமாக நிறைவேற்றப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 175 வார்டுகள்? சென்னை மாநகராட்சியில் இப்போது உள்ள 155 வார்டுகளில், வார்டுக்கான மக்கள் தொகையை மாற்றியமைப்பதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 140 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் புதிதாக இணைக்கப்பட உள்ள நாகராட்சி மற்றும் ஊராட்சிகளை வார்டுகளாக பிரிக்கும் போது 35 வார்டுகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் விரிவுபடுத்தப்பட உள்ள சென்னை மாநகராட்சியில் 175 வார்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி விரிவுபடுத்தப்படுவதன் மூலம், இணைக்கப்படும் புதிய பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், மாநகராட்சிக்கு இணையான குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சொத்து வரி உயர்வதோடு, சொத்து வரி முறைகேடுகளும் முழுவதுமாக களையப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Thursday, 31 December 2009 10:22
 

முதல் நிலை நகராட்சியானது அறந்தாங்கி

Print PDF

தினமணி 31.12.2009

முதல் நிலை நகராட்சியானது அறந்தாங்கி

அறந்தாங்கி, டிச. 30: அறந்தாங்கி நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை நகராட்சித் தலைவர் பழ. மாரியப்பன் தெரிவித்தார்.

அறந்தாங்கியில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் புதன்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.ஏ.என். கச்சுமுஹம்மது முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கோ. நாராயணசாமி (திமுக): ""அறந்தாங்கி எல்.என்.புரத்தில் ஊர்புற நூலகம் தொடங்கப்படும் என்று 3 மாதங்களுக்கு முன் அறிவித்தீர்கள். என்னவாயிற்று?

லெ. முரளிதரன் (திமுக): நகராட்சி இடம் அங்கே இருப்பதாகக் கூறினீர்கள்? தீர்மானம் முன்வைக்கப்படவில்லை; ஏன் தாமதப்படுகிறது?

தலைவர்: நகராட்சிக்கு இருக்கும் இடம் போதவில்லை என்று வேறு இடம் கேட்டிருக்கிறோம். இதற்கான கருத்துரு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சாதகமான பதில் வரும். உடன் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.''

கோ. இளங்கோ (சுயே.): ""எனது வட்டத்தில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஓராண்டாகவே இதுகுறித்து பேசி வருகிறேன். ஆனால், நடவடிக்கை இல்லை. நிரந்தரமாக ஆணையர் இல்லாத காரணத்தால் அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நம் நகராட்சிக்கு என்று தனி ஆணையரை நியமிக்க தீர்மானம் இயற்ற வேண்டும்.''

தலைவர்: ""நமது நகராட்சி இரண்டாம் நிலையிலிருந்து தற்போது முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 19 புதிய ஆணையர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். ஆகையால், விரைவில் நம் நகராட்சிக்கும் தனி ஆணையர் நியமிக்கப்படுவார். குடிநீர்ப் பிரச்னை 10 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.''

மு.வி. பார்த்தீபன் (திமுக): ""நகர்மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு 3-வது ஒப்பந்தப்புள்ளி கோரியும் கூடுதல் தொகை கேட்கப்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரரிடம் பேசி இப்பிரச்னையை சரிசெய்ய தீர்மானம் முன்வைத்துள்ளீர்கள். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைக்கு நகர்மன்றம் அடிபணியக் கூடாது. வேறு ஒருவர் கூடுதல் தொகைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார். அவருக்கு பணியை ஒதுக்கலாமே?''

தலைவர்: ""3 முறை நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டும் யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. இனிமேல் புதிய ஒப்பந்ததாரரைச் சேர்க்க முடியாது. ஆகேவேதான் காலம் கருதி பேசி நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.''இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Last Updated on Thursday, 31 December 2009 10:03
 


Page 721 of 841