தினமணி 31.12.2009
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,400 கோடியில் திட்டம்
திருப்பூர், டிச.30:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக புதன்கிழமை நடந்த மாமன்ற கூட்டத்தில் ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி கூட்டம் மேயர் க.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடந்தது. துணைமேயர் கெ.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இந்திய கம்யூ., உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், திருப்பூர் மா நகராட்சியில் குப்பைகள் அப்புறப்படுத்துவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகி றது.
அதற்காக இடுவாயில் துவக்க அறிவிக்கப்பட்ட உரத்தொழிற்சாலைக்கு சுற்றுசுவர் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.30 லட்சம் நிதியை, தற்போது குப்பை கன்டெய்னர்கள் வாங்குவதற்கு ஒதுக்க மாமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.
அப்படியென்றால் இடுவா யில் உரத்தொழிற்சாலை திட்டம் கைவிடப்பட்டதா தவிர, தனியார் பராமரிப்பில் இருந்த கோயில்வழி உரத்தொழிற்சாலையில் தற்போதைய நிலை குறித்தும் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, கோயில்வழி உரத்தொழிற்சாலை செயல்பாடு குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி நிர்வாகித்து வந்த தனியாரிடம் கேட்கப்பட்டது. ஆனால், 15 நாட்கள் கடந்தும் இதுவரை பதில் வராததால் அரசு உத்தரவை அடுத்து அந்த உரத்தொழிற்சாலையை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதத்தில் கோயில்வழி உரத்தொழிற்சாலையை மாநகரா ட்சி நிர்வாகம் கையகப்படுத்தும்.மேலும், இடுவாய் உரத்தொழிற்சாலையில் இயந்திரம், கட்டடம் உள்ளிóட்டவற்ற திடக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் திட்டவரைவு தயாரிக்கப்பட்டு வருவதால் அதற்கா ன நிதி அரசிடம் இருந்தே பெற முடியும்.
இதையடுத்து, சுற்றுச்சுவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி கன்டெய்னர் பெட்டிகள் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.
மாமன்ற ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அந்நிதி உரத்தொழிற்சாலை சுற்றுச்சுவர் கட்ட பயன்படுத்தப்படும்.
தவிர, திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க தனியார் நிறுவனம் சார்பில் சுமார் ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 27-ம் தேதி நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அமெரிக்க வல்லுநர்களுடன் ஜன.5, 6, 7ம் தேதிகளில் திருப்பூர் மாநகராட் சியில் கலந்தாலோசனை செய்யப்பட்டு, தொடர்ச்சியாக ஜன.11ல் மீண்டும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விவாதித்து இத்திட்டம் நிறைவேற்றுதல் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.