Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செல்போன் டவர் அமைக்க அனுமதி மறுப்பு

Print PDF

தினமணி 24.12.2009

செல்போன் டவர் அமைக்க அனுமதி மறுப்பு

திருப்பூர்,டிச.23: 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிமம் இல்லாமல் செல்போன் டவர் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

திருப்பூர் 15 வேலம்பாளையத்திற்கு உட்பட்ட கருப்பராயப்பன் கோவில் 2 வது தெருவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது.

இதையடுத்து 15 வேலம்பாளையம் நகராட்சி உரிமம் பெறாமல் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செல்போன் கோபுரம் அமைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியை நகராட்சித் தலைவர் பி.எஸ்.மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். நகராட்சி உரிமம் இல்லாமல் டவர் அமைப்பதை கண்டித்தனர்.

மேலும் அந்த இடத்தில் டவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுóக்கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 10:18
 

மீன் கடை அமைக்க அனுமதி

Print PDF

தினமலர் 24.12.2009

மீன் கடை அமைக்க அனுமதி

திருப்பூர் : திருப்பூர் அவிநாசி ரோட்டில் 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த மீன் கடைகள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது; புதிய இடத்தில் மீன் கடைகள் அமைக்க,நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பூர், குமார் நகர் பஸ் ஸ்டாப் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து எஸ்..பி., தியேட்டர் வரை மீன் கடை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். சமீபத்தில் ரோட்டை அகலப் படுத்தி, சென்டர் மீடியன் அமைக்கப் பட்டது. ரோட்டை ஒட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, மீன் வியபாரிகள் வேறிடத்தில் கடை வைக்க அனுமதிக்கக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். காந்தி நகர் எதிரே உள்ள 60 ரோட்டில் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

வியாபாரிகள் கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தனர். அவிநாசி ரோட்டையும், பி.என்., ரோட்டையும் இணைக்கும் இந்த ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதால், கடைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது; மீன் கடைகளை அமைக்க நகராட்சிக் குட்பட்ட இடத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி, நகராட்சி தலைவர் மணியிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர். காந்தி நகர் 80 அடி ரோட்டில், வார நாட்களில் மீன் கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 24 December 2009 09:35
 

அனுமதியின்றி மொபைல் போன் 'டவர்' : நகராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 24.12.2009

அனுமதியின்றி மொபைல் போன் 'டவர்' : நகராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதி யில், அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது; நகராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அனுமதியின்றி "டவர்' அமைத்தால், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது

.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி ஒன்பதாவது வார்டு கருப்பராயன் கோவில் இரண் டாவது வீதியில், நகராட்சி அனுமதியின்றி தனியார் நிறுவனம் மொபைல் போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்துள்ளது; பொதுமக்கள் எதிர்ப்பை யும் மீறி, போலீஸ் உதவியுடன் அந்நிறுவனம் டவர் அமைக்க முயற்சித்தது. பொதுமக்களின் எதிர்ப்பு வலுக்கவே, நகராட்சி தலைவரும், செயல் அலுவலரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஓராண்டுக்கு முன், பழனிச்சாமி என்பவரது இடத்தில் "டவர்' அமைக்க, அந்நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. சில மாதங்களாக குழி தோண்டப் பட்டு, பணிகள் நடந்து கொண்டிருந்தன. தேவை யான உபகரணங்களை ரோட்டில் போட்டு வைத் திருக்கின்றனர். இப்பகுதியில் "டவர்' அமைத்தால், அருகில் உள்ள வீடுகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று, கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தர்.

இதையடுத்து, "டவர்' அமைக்க அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறி, அனுப்பர் பாளையம் போலீசில் அந்நிறுவனம் புகார் கொடுத் துள்ளது. நேற்று, அப்பகுதியில் நகராட்சி அனுமதி யின்றி போலீஸ் பாதுகாப்புடன் டவர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஓன்று கூடினர்.இருந்தும் பணி தொடங்கப்பட்டதால், பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முறையிட்டனர். நகராட்சி அனுமதி பெறாமல் டவர் அமைக்கப் படுவதை அறிந்து, நகராட்சி தலைவர் மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம், செயற்பொறியாளர் மல்லிகை, கவுன்சிலர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், செயல் அலுவலர் பேசுகையில், ""அனுமதி பெறா மல் டவர் அமைக்கப்படுகிறது; பணி தொடர்ந்து நடந்தால், அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 09:34
 


Page 729 of 841