Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

Print PDF

தினமணி 19.12.2009

மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

பெங்களூர், டிச.18: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மாநகராட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. மாநகராட்சி தேர்தலில் எல்லா சமூகத்தினரும் போட்டியிட வசதியாக 198 வார்டுகளிலும் இட ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு சட்டப்பேரவை தொகுதி வாரியாக தாழ்த்தப்பட்டோரை கணக்கெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு வார்டு வாரி இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வார்டு வாரியாக இட ஒதுக்கீடு செய்யது அறிவிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு அறிவித்திருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வார்டு வாரி புதிதாக இட ஒதுக்கீடு செய்து டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்óதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நகர வளர்ச்சித்துறை அதிகாரிகள் புதிய வார்டு பட்டியலைத் தயாரிக்கும் பட்டியலை செய்து முடித்தனர்.

இந்தப் பட்டியலுக்கு சரிபார்த்து இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த வசுந்தரா மற்றும் சிலர் உச்சநீதமன்றத்தில் மனு செய்தனர். சட்டப்பேரவை தொகுதி வாரியாக அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டாலேயே எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கும்.

வார்டு வாரி இட ஒதுக்கீடு செய்து அறிவித்தால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எல்லா சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரதிநிதித்துவம்

கிடைக்காமல் போய்விடும். மேலும் இட ஒதுக்கீடு பிரச்னையில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரினர்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம்,சுதர்சன் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வசுந்தரா மற்றும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சோரப்ஜி, நாகேஷ்வரராவ், ராகவேந்திரா, மற்றும் எஸ்.ஸ்ரீவத்சா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையுமó கேட்ட நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 19.12.2009

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகள் பறிமுதல்

உடுமலை,டிச.18: உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

÷உடுமலை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் ரோடுகளில் சுற்றித் திரியும் ஆடுகளை பறிமுதல் செய்ய நகராட்சி ஆணையாளர் ஆ.சுந்தராம்பாள் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் சுற்றித் திரிந்த ஆடுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செயதனர்.

÷காலை 8 மணிக்கு ஏரிப்பாளையம் பகுதியில் துவங்கி திருப்பூர் ரோடு, தளி ரோடு, பழைய மற்றும் மத்திய பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, ரயில் நிலையம் பகுதி, காந்தி சவுக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த 54 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

÷பின்னர் இந்த ஆடுகள் அனைத்தும் ராஜேந்திரா ரோட்டில் உள்ள நகராட்சி மாட்டுத் தொழுவத்திற்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டன.

÷இது குறித்து நகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கூறியது:போக்குவரத்திற்கு இடையூறாக மேயும் ஆடுகளை தொடர்ந்து பறிமுதல் செய்ய உள்ளோம். முதல் தடவையாக இருப்பதால் ஆட்டின் உரிமையாளர்களிடம் ஒரு ஆட்டிற்கு ரூ.100 மட்டும் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது தடவையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.200அபராதம் விதிக்கப்படும். மூன்றாம் முறையாக இருந்தா ல் அந்த ஆடுகள் ஏலத்தில் விடப்படும் என்றனர்.

÷சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன்,காமராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த நடவடிக்கைகளின்போது உடன் இருந்தனர்.

 

மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசுக்கு பரிந்துரை- ஆணையர்

Print PDF

தினமணி 19.12.2009

மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசுக்கு பரிந்துரை- ஆணையர்

மதுரை, டிச. 18: மதுரை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று, மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 3}வது செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:

வணிக நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று, புதிய கட்டடங்களுக்கு அதிக வரி விதிப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.

வரியைக் குறைப்பது தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள மாநகராட்சி எல்லையை 117 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரையை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்த வாரத்தில் இருந்து மதுரையில் அனைத்து வார்டுகளிலும் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற உள்ளது.

குடிநீர் இணைப்புகளை இம்மாதம் 31}ம் தேதிக்குள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், பாரம்பரிய நடைபாதை சுற்றுலாத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும் என்றார் அவர்.

முன்னதாக, கூட்டத்தில் சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல், செயலர் என். ஜெகதீசன் ஆகியோர் சொத்து வரி குறைப்பு, மாநகராட்சி விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

Last Updated on Saturday, 19 December 2009 08:00
 


Page 735 of 841