Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

Print PDF

தினகரன்              25.11.2013

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

சோமனூர்,:கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோமாரி நோய் தடுக்க பேரூராட்சி நிர்வ £கம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிவருகிறது.

கோமாரி நோய் தாக்கத்தின் அறிகுறிகள் பற்றியும், அவற்றை பராமரித்து தடுக்கும் முறைகள் பற்றியும் செயல் விளக்கத்துடன் கூடிய இந்த நோட்டீசை விநியோகித்தனர்.

பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையில் செயல்அலுவலர் ஜெகதீசன் முன்னிலையில் பணியாளர்கள், கால்நடைகள் உள்ள ஒவ்வொ ரு வீட்டுக்கும் சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இதுகுறித்து துண்டு பிரசுரம் மூலமாகவும், ஆட்டோ விளம்பரம் மூலமாகவும், மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கால்நடைவளர்க்கும் மக்களுக்கு கோமாரிநோய்பரவுவது பற்றியும் அவற்றை தடுப்பது பற்றியும் தெரியப்படுத்திவருகின்றனர்.

இந்த நோய் வேகமாகப்பரவிவருவதால், கால்நடைகளையே நம்பிவாழும் விவசாயிகள் கவனம் எடுத்து கால்நடைகளுக்கு நோய்தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்றும், மாடுகளின் வயிற்றிலும், வாயிலும் புண் ஏற்படாமல் பார்த்துக்கொல்லும் படியும், கால்நடை மருத்துவரிடம் கால்நடைகளை காண்பித்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி        22.11.2013

கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகராட்சி கோ-அபிúஸகபுரம் கோட்டம் சார்பில் கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை பொன்னகரில் நடைபெற்றது.

  இந்தப் பேரணியை மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோட்டத் தலைவர் ஆர். ஞானசேகர், நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பேரணியில் 1206 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது.

 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி        22.11.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த மாதத்துக்கான மன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறவுள்ளது.

இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 75 of 841