Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மெரீனாவில் கிரிக்கெட் விளையாடுவதை தடுக்க போலீஸ் குவிப்பு

Print PDF

தினமலர் 09.11.2009

 

மெரீனா: மணலிலும் கிரிக்கெட்டுக்கு தடை

Print PDF
தினமணி 09.11.2009

மெரீனா: மணலிலும் கிரிக்கெட்டுக்கு தடை

மெரீனா கடற்கரை சேவை சாலையில் (சர்வீஸ் ரோடு) கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு யாரும் கிரிக்கெட் விளையாடாத வகையில் ஞாயிற்றுக்கிழமை

சென்னை, நவ. 8: மெரீனா கடற்கரை உட்புறச் சாலையில் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட தடை மணல் பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைப் பயிற்சியில் ஈடுபடுவோர்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட போலீஸôர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனர்.

மாநகர போலீஸôரின் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும், தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் போலீஸôர் பிடிவாதமாக உள்ளனர்.

இதன் காரணமாக, கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகள் கடற்கரை உட்புறச் சாலையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன.இதையடுத்து சனிக்கிழமை காலையில் கிரிக்கெட் விளையாட வருவோரை விரட்ட ஆயுதப்படை போலீஸôர் 50 பேர் நிறுத்தப்பட்டனர். மழை காரணமாக கிரிக்கெட் விளையாடுவோர் யாரும் சனிக்கிழமை கடற்கரைக்கு வராததால் போலீஸôர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் ஆவடி, அம்பத்தூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். ஆனால், அவர்களை ஆயுதப்படை போலீஸôர் எச்சரித்து விரட்டியடித்தனர்.

மணல் பரப்பில்...: உட்புறச் சாலையில் விளையாட தடை விதிக்கப்பட்டதை அடுத்து மணல் பரப்பில் கிரிக்கெட் விளையாடியவர்களையும் போலீஸôர் விரட்டினர்.

கடற்கரையில் உட்புறச்சாலை, மணல் பரப்பு என அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 09 November 2009 09:44
 

வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்காக 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு

Print PDF

தினமணி 09.11.2009

வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்காக 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை குளோரின் மாத்திரைகளை வழங்கிய மேயர் மா. சுப்பிரமணியன். உடன் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி

சென்னை, நவ.8: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 19 சமையல் கூடங்களில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரம் மாநகராட்சி நிவாரண மையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயாரிக்கப்படும் உணவை, மேயர் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மூலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கோபாலபுரம், சிந்தாதரிப்பேட்டை, பேசின் பாலம் ஆகிய 4 இடங்களில் நிரந்தர நிவாரண சமையல் கூடங்கள் உள்பட 19 இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமை 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், 15 ஆயிரம் ரொட்டிகளும் வழங்கப்பட்டன. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை காலையில் 46 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், 10 ஆயிரம் ரொட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மற்ற இடங்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக சென்னையில் கடந்த நான்கு நாட்களாக 43 செ.மீ. மழை பெய்தது. கடந்த ஆண்டுகளில் பருவ மழையின் போது பல பகுதிகளில் 6 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கி நின்றது.

ஆனால், இப்போது கால்வாய்கள் தூர்வாரியது, புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுகள் மூலம் தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலை, வேளச்சேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் நிற்காமல் சென்றுள்ளது என்றார் மேயர்.

Last Updated on Monday, 09 November 2009 09:42
 


Page 765 of 841