Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மெரீனாவில் கிரிக்கெட் தடை

Print PDF

தினமணி 5.11.2009

மெரீனாவில் கிரிக்கெட் தடை

சென்னை, நவ. 4: குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் பிடிவாதம் காரணமாகவே மெரீனா கடற்கரை உள்புறச்சாலையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநகரப் போலீஸôரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை போலீஸôர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விரட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கடற்கரை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வரும் வாரம் முதல் இங்கு யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என போலீஸôர் அறிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில், கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் 228 விளையாட்டுத் திடல்களில் கிரிக்கெட் விளையாடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ""மேதினப் பூங்கா விளையாட்டுத் திடல், கோபாலபுரம் விளையாட்டுத் திடல், டர்ன்புல்ஸ் சாலை திடல், நந்தனம் விரிவாக்கம் திடல், செனாய் நகர் திருவிக பூங்கா திடல், எழும்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம், பட்டினபாக்கம் வீட்டுவசதி வாரிய விளையாட்டுத் திடல் ஆகியவற்றை கிரிக்கெட் விளையாடுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என போலீஸ் கமிஷனரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி திடல்கள் 228

""மாநகராட்சிக்கு சொந்தமான 228 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான திடல்கள் மிகவும் சிறியவை. அதுவும் அந்தந்தப் பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலும் பல திடல்களில் நெருக்கடி நிலவுவதால், விளையாடும் போது இளைஞர்களுக்குள் மோதல் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் மேலும் சில குழுக்கள் வெளியில் இருந்து இங்கு வந்தால் அது இளைஞர்களுக்குள் மோதலை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்'' என ஷெனாய் நகரை சேர்ந்த ராஜன் கூறினார்.

ஹாக்கி அரங்கில் கிரிக்கெட்

மெரீனா கடற்கரைக்கு மாற்றாக எழும்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கை கிரிக்கெட் விளையாட பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீஸ் கமிஷனர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அரங்கம் ஹாக்கி விளையாட்டுக்கான பிரத்யேக இடமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வெளியில் இருந்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க முடியாது என அரங்கத்தின் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி புகார் செய்ததா?

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களால் அழகுப்படுத்தும் பணிகளுக்கு பாதிப்பு என்று புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இது விஷயத்தில் மாநகராட்சி தரப்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகள் தடை விதிப்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனை கெüரவப் பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் நடைமுறை காரணங்களை கருத்தில் கொண்டு தடை உத்தரவை போலீஸôர் திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated on Thursday, 05 November 2009 06:21
 

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணி ஜனவரிக்குள் முடிவுறும்: ஆணையர்

Print PDF

தினமணி 5.11.2009

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணி ஜனவரிக்குள் முடிவுறும்: ஆணையர்

மதுரை, நவ. 4: மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் (தமிழ்ப் புத்தாண்டு) முடிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ. 6 கோடி செலவில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் அமைப்பதற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும்.

சிறப்பு மருத்துவ முகாம்: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியாவைத் தடுக்கும் வகையில், தினமும் 3 வார்டுகள் வீதம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நகரில் மழைநீர் தேங்கும் இடம் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் வீரியம் மிக்க கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனுப்பானடி பகுதி மக்களுக்கு மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. அப்பகுதி மக்கள் வைகை அணை குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அனுப்பானடி பகுதி மக்களுக்கும் வைகை அணை குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதாளச் சாக்கடை சீரமைப்பு: மதுரை மாநகரில் விடுபட்ட சில பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பழுதடைந்துள்ள சாக்கடைகள், மெட்ரோ நிறுவனம் மற்றும் மாநகராட்சி மூலம் சரிசெய்யப்பட்டு வருகின்றன. பயன்படுத்தப்படாத லாரி நிறுத்தங்கள்:மாநகராட்சி சார்பில் ரூ. 7 கோடி மதிப்பில், கோச்சடை, மாட்டுத்தாவணி மற்றும் அவனியாபுரத்தில்லாரி நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இங்கு லாரிகள் நிறுத்தப்படுவதில்லை.

எனவே, இதுகுறித்து போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி கூடுதல் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 2-வது வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் மதுரை மாநகரில் நாள்தோறும் குடிநீர் விநியோகம்செய்வதற்கு, குழாய் இணைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்னும் ஒருவார காலத்துக்குள் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் ஆணையர்.

Last Updated on Thursday, 05 November 2009 06:06
 

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள்; 300 போலீசார் கண்காணிப்பு

Print PDF

மாலை மலர் 4.11.2009

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள்; 300 போலீசார் கண்காணிப்பு

சென்னை, நவ. 4-

சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும். 300போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள மெரீனா. தற்போது புதுபொழிவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிந்து இன்னும் சில தினங்களில் பொதுமக்கள் பார்வைக்கு முறைப்படி திறந்து வைக்கப்பட உள்ளது.

மெரீனா கடற்கரையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட, நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 14இடங்களில் சிறிய பூங்காக்களும் அங்கு பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையிலும் பூங்காக்களிலும் 3கோடியே 89லட்சம் செலவில் 700-க்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைகள் அனைத்தும் மெரீனா சர்வீஸ் சாலையில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்களால் சீர்குலைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மின்விளக்குகள் பளிங்குகற்கள் உடைக்கப்படுவதாகவும், சாலைகள் சேதப்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக மெரீனாவில் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கபடுவதாக போலீஸ்கமிஷனர் ராஜேந்திரன் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் நபர்களை விரட்டி அடிக்கவும், கைது செய்யவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

மெரீனா சர்வீஸ் சாலையில் குழிதோண்டி கம்புகளை நட்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சாலை சேதமாகிறது. இங்குள்ள மின்விளக்குகளை பந்துகொண்டு அடித்தும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்துகிறார்கள்.

சாலையில் டூவீலர்களிலும், கார்களிலும் யாரும் செல்லமுடிவதில்லை. வாக்கிங் செல்லும் முதியவர்கள் மீது பந்து பட்டு காயம் ஏற்படுகிறது. மெரீனாவில் அழகை கெடுக்கும் வகையில் செயல் படுகிறார்கள்.

எனவே அவர்கள் மீண்டும் இங்கு கிரிக்கெட் விளையாட அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீறி கிரிக்கெட் விளையாடினால் வாலிபர்களை விரட்டி அடிப்போம். கேட்க மறுத்தால் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்வோம்.

இங்கு கிரிக்கெட் விளையாட வரும் பெரும்பாலான வாலிபர்கள் அம்பத்தூர், செங்குன்றம் மண்ணடி பகுதியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்குள்ளோ சண்டையும் போட்டுக் கொள்வதால் வீணான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் தடுக்க சுழற்ச்சி முறையில் 300போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மெரீனா கடற்கரை பாதுகாப்பு பணிக்கு மாநகராட்சிக்கு தனியார் செக்கி யூரிட்டிகளையும் நியமிக்க முடிவு செய்துள்ளது. தினமும் காலை முதல் இரவு 10மணி வரை 2ஷிப்டுகளில் செக்கியூரிட்டிகள் பணிபுரியும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 7பேர் வீதம் 14பேர் பணிக்கு அமர்த்தப்படுவர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 3கிலோமீட்டர் தூரத்திற்கு இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்காக திடகாத்திரமான உடல்பாகு கொண்ட 45வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் செக்யூரிட்டிகளாக நியமிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது

Last Updated on Wednesday, 04 November 2009 11:50
 


Page 770 of 841