தினமணி 3.11.2009
தென்காசி, செங்கோட்டையில் உள்ளாட்சி தின விழா
தென்காசி, நவ. 2: தென்காசி, செங்கோட்டை நகராட்சிகளில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி நகராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் வே. கோமதிநாயகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இப்ராஹீம் முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கோலம், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நகர்மன்ற உறுப்பினர்கள் ராசப்பா, ராமராஜன், ராமகிருஷ்ணன், வெள்ளைப்பாண்டி, நாகூர்மீரான், விஜயலட்சுமி, கசமுத்து, முகம்மது உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரமேஷ் வரவேற்றார். கணக்கர் ராஜமணி நன்றி கூறினார்.
செங்கோட்டையில்: செங்கோட்டையில் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து விழிப்புணர்வுப் பேரணிநடைபெற்றது.பேரணியை நகர்மன்றத் தலைவர் எஸ்.எம்.ரஹீம் தொடக்கிவைத்தார்.
மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பொதுஅறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.எம். ரஹீம் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். நடுவராக புலவர் முகம்மதுமுஸ்தபா செயல்பட்டார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜீவா, ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.நகர்மன்ற உறுப்பினர் சேக்அப்துல்காதர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் கல்யாணி, கணேசன், ரவீந்திரன், பொறியாளர் சீதாமோகன், துப்புரவு ஆய்வாளர் முகம்மது இஸ்மாயில், மேலாளர் (பொறுப்பு) முத்துச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். நகரமைப்பு ஆய்வாளர் ஜின்னா நன்றி கூறினார்.