Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரியலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 3.11.2009

அரியலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

அரியலூர், நவ. 2: அரியலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, நகராட்சி அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, சுவற்றில் வர்ணங்கள் பூசப்பட்டன.

மேலும், நகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டது.

விழாவில் நகர் மன்றத் தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக அதிகாரி த. சமயசந்திரன், துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன்,நகர் மன்றஉறுப்பினர்கள் ஏ.பி.எஸ்.பழனிச்சாமி,நகராட்சி மேற்பார்வையாளர் ஆர். பாண்டு, சுகாதார ஆய்வாளர் எஸ். ரவீந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Tuesday, 03 November 2009 07:22
 

உள்ளாட்சி தின விளையாட்டுப் போட்டிகள்

Print PDF

தினமணி 3.11.2009

உள்ளாட்சி தின விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பெரம்பலூர் நகராட்சி சார்பில், உள்ளாட்சி தினத்தையொட்டி நகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி. முகுந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீ. ஓட்டப் பந்தயம், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

நகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்களுக்கு தனித் தனியே போட்டிகள் நடைபெற்றது. இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜே.எஸ். கருணாநிதி, கே.ஜி. மாரிக்கண்ணன், ரஹமத்துல்லா, அப்துல் பாரூக், அன்புதுரை, ரமேஷ்பாண்டியன், சரவணன், ஈஸ்வரி, ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:20
 

உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 3.11.2009

உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி

தஞ்சாவூர், நவ. 2: தஞ்சாவூர் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழிப்புனர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் நகராட்சி சார்பில் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கூட்டு துப்புரவுப் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளை நகர்மன்றத் தலைவர் தேன்மொழி ஜெயபால் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சலீம், நகராட்சி ஆணையர் நடராஜன், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் குருசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணியை, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தொடக்கிவைத்தார். மகாமக குளத்திலிருந்து புறப்பட்டப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்கா அருகே நிறைவடைந்தது.

பேரணிக்கு நகர்மன்ற மூத்த உறுப்பினர் ரா. துரை தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சு.. தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் க. அன்பழகன், நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், முதுநிலை நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Last Updated on Tuesday, 03 November 2009 07:18
 


Page 775 of 841