தினமணி 3.11.2009
ராசிபுரத்தில் உள்ளாட்சி தின விழா
ராசிபுரம், நவ. 2: ராசிபுரம் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
முன்னதாக நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு தட்டிகள் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
நகராட்சி ஆணையாளர் வே.மாணிக்கவாசகம், பொறியாளர் இளங்கோவன், மேலாளர் அத்தியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.பாலு, காதர்பாட்சா, ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.