Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

புதுகை, அறந்தாங்கியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

புதுகை, அறந்தாங்கியில் உள்ளாட்சி தின விழா

புதுக்கோட்டை, நவ. 1: புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டையில் விழாவையொட்டி நடைபெற்ற பேரணியை நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு, நகர் மன்றத் தலைவர் உ. ராமதிலகம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் க. நைனா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாரண, சாரணீயர் இயக்க மாவட்டச் செயலர் வே. குண்சீலன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ. இப்ராஹிம்பாபு, சண்முகபழனியப்பன், செ. நாகராஜன், . சந்திரசேகரன், எஸ். மீனாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நகரமைப்பு அலுவலர் டி.டி. பிச்சாண்டி வரவேற்றார். நகராட்சிப் பொறியாளர் ஆர். ராஜசேகரன் நன்றி கூறினார்.

விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான வினாடி - வினா, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அறந்தாங்கி: அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தின விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, வீரமாகாளியம்மன் நீரேற்று நிலையத்தில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் அளிக்கப்பட்டன. மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள், மகளிப் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கு நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி..என். கச்சுமுஹம்மது, நகர்மன்ற உறுப்பினர்கள் மு.வி. பார்த்திபன், நா. முத்துலதா, . சுமதி சங்கர், கே. ராமசாமி, என். ரமேஷ், மேலாளர் என்.ஆர். ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ஆர். முத்துக்குமார், உதவிப் பொறியாளர் எஸ். சந்திரசேகர், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கரூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

கரூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

கரூர், நவ.1: கரூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர்மன்றத்தலைவர் ப. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், முன்னாள் நகராட்சி ஆணையர் ஆர். ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாவட்டச் செயலர் வாசுகிமுருகேசன் சிறப்பாளராகப் பங்கேற்று நகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட குடிநீர் கசிவை சீர்செய்யும் வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 258 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2.58 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சி தின விழாவில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு நகராட்சி சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்த விளக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

கவுன்சிலர்கள் ஆண்டாள் ஜி. பாலகுரு, இரா. பிரபு, வே. கதிரவன், ராஜலிங்கம், கமலா, ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஒசூரில் ரூ.30 லட்சத்தில் நவீன நூலகம்

Print PDF

தினமணி 2.11.2009

ஒசூரில் ரூ.30 லட்சத்தில் நவீன நூலகம்

ஒசூர், நவ. 1: ஒசூர் காந்தி சிலை அருகே பழைய பெங்களூர் சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புதிய நவீன நூலகக் கட்டடம் ரூ.30 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டப்படும் என நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏசத்யா கூறினார்.

ஒசூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவையொட்டி நகராட்சி அலுவலகத்தில் தாற்காலிக நூலகத்தைத் தொடங்கிவைத்து, எஸ்..சத்யா பேசியது:

தாற்காலிக நூலகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் உள்ளன. இதனை நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் பயன்படுத்துவர்.

ஒசூர் காந்தி சிலை அருகே அமையவுள்ள நவீன நூலகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தினசரி நாளிதழ்கள், அனைத்து மொழிப் புத்தகங்கள் வைக்கப்படும். ஒரே நேரத்தில் சுமார் 300 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் புதிய நூலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நூலகம் இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

நகர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒசூர் நகராட்சி சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய்ஆனந்த், ரமேஷ்பாபு, சீனிவாசன், இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 


Page 778 of 841