Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

களியக்காவிளை, நவ. 1: களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ. சலாவுதீன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இரா. சங்கர் வரவேற்றுப் பேசினார்.

இதில் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜி. ஜான்ஜோசப் பேசியதாவது:

பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் விழா நடத்துவது போல உள்ளாட்சி தின விழா நடத்தப்படுகிறது.

இந்த விழா கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை நினைத்துப் பார்க்கவும், அடுத்த ஓராண்டு செய்ய உள்ள வேலைகளை நிர்ணயம் செய்வதற்கும் பயன்பட வேண்டும்.

வரும் நாள்களில் மக்கள் பங்கேற்பு இருக்கக்கூடிய விழாவாகவும், மக்கள் கருத்துகளை சொல்லக்கூடிய வகையிலும் இந்த விழா மாற்றப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

சுற்றுச் சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியும் அதன் பங்கை செம்மையாக செய்ய வேண்டும் என்றார் அவர்.

விழாவில் பேரூராட்சி உறுப்பினர்கள் விஜயானந்தராம், ஆர். பத்மினி, என். விஜயேந்திரன், வின்சென்ட், . ராஜு, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ். செல்லப்பன், குழித்துறை கல்வி சரக பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், களியக்காவிளை வர்த்தகர்கள் சங்க பொதுச் செயலர் மு. ரிபாய் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

ரன்கோவிலில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

சங்கரன்கோவிலில் உள்ளாட்சிகள் தின விழா

சங்கரன்கோவில், நவ. 1: சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பேரணியும் நடைபெற்றது.

நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் துவக்கி வைத்தார்.

பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதியார் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியை அடைந்தது.

அங்கு உள்ளாட்சி தினவிழாவையொட்டி பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இதில் கிருஷ்ணசாமிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி க. மகாலட்சுமி முதல் பரிசும், வடக்கு ரதவீதி (கிழக்கு) நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஜோதிலட்சுமி 2-வது பரிசும், கலைஞர் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி மு. இன்பரசி 3வது பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சித் துணைத் தலைவர் சு. சங்கரன், நகராட்சி மேலாளர் அ. மாணிக்கஅரசி, நகராட்சி உறுப்பினர் நடராஜன், கே.எஸ்.கே. சங்கர சுப்பிரமணியன், வனமூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

நகரமைப்பு ஆய்வாளர் பே. முத்துச்சாமி நன்றி கூறினார்.

ஊராட்சி ஒன்றியம்:

இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினவிழா அதன் தலைவர் க .அன்புமணி தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் வே. செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகநயினார், ஆசைத்தம்பி, உள்ளாட்சி தணிக்கை ஆய்வாளர் முருகையா உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா வரவேற்றார். அலுவலக உதவியாளர் கணேசன் நன்றி கூறினார்.

 

நெடுஞ்சாலைத் துறையிடம் மேலும் 3 ரயில்வே மேம்பால பணிகளை ஒப்படைக்க ராக் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 2.11.2009

நெடுஞ்சாலைத் துறையிடம் மேலும் 3 ரயில்வே மேம்பால பணிகளை ஒப்படைக்க ராக் வலியுறுத்தல்

கோவை, நவ. 1: கோவை மாநகரில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட 7 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் மாநகராட்சி ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இத்துடன், மேலும் 3 ரயில்வே மேம்பாலப் பணிகளையும் சேர்த்து ஒப்படைக்க வேண்டும் என ராக் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ராக் துணைத் தலைவர் பாலசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை நகரில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட 7 சாலைகளை மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையிடம் வழங்க எடுத்துள்ள முடிவை ராக் வரவேற்கிறது.

ஆனால், முக்கியமான 3 ரயில்வே மேம்பாலங்கள் இப் பட்டியலில் இடம் பெறவில்லை. கணபதி - ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங், பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள லெவல கிராசிங் ஆகிய பணிகள் இடம்பெறவில்லை.

மேலும் மூன்றாவதாக, மாநகரின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது.

இதனால், இந்த 2 பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, கிக்கானி மேல்நிலைப் பள்ளிக்கு அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மேற்படி, 3 பணிகளும் மாநாகராட்சி பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் உள்ள லட்சமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம் சந்திப்பு, நூறடி சாலை சந்திப்பு, சிவானந்தா காலனி - மேட்டுப்பாளையம் சாலை சந்திப்புகளில் மேம்பாலங்களும், பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலமும் அமைக்க வேண்டும்.

 


Page 780 of 841