Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

Print PDF

மாலை மலர்         20.11.2013 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்
 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, நவ.20 - சென்னை நகரில் வாழும் ஏழைகளுக்கு 5 லட்சம் இலவச கொசுவலைகள், தலா 6½ லட்சம் நொச்சி செடிகள், பப்பாளி கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி காட்சி(வீடியோ கான்பரன்சிங்) மூலம் தொடங்கி வைக்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி, சென்னையில் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் ஓரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச கொசு வலை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளையொட்டி பசுமை போர்வை என்ற திட்டத்தின் கீழ், சென்னை மாநகரில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனை வளாகங்கள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் மயான பூமிகள் போன்ற பொது இடங்களில் 6½ லட்சம் எண்ணிக்கையில் 'நொச்சி' செடிகள் நடப்படும் என்று மன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், வைட்டமின் 'ஏ' என்னும் உயிர்ச்சத்தை பெற்றிடும் வகையிலும், அனைவருக்கும் ஒரு பப்பாளி கன்று வீதம் 6½ லட்சம் பப்பாளி கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டமும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி, அரசு பொது தேர்வுகளான யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் திட்டமும் சென்னை மாநகராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த திட்டங்கள் அனைத்துக்கும் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 5 லட்சம் வீடுகளுக்கு தலா ஒரு கொசு வலை வழங்குதல், 6½ லட்சம் நொச்சி செடிகள் நடுதல் ஆகிய திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் இன்று (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

வீடுகளில், தொட்டிகள் மற்றும் தரையில் வைத்து நொச்சி செடிகளை வளர்க்க விரும்புவோர் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களை தொடர்பு கொண்டு இலவசமாக செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர 6½ லட்சம் பப்பாளி கன்றுகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும் முதன் முதலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தையும் முதல் அமைச்சர் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

அனைத்து அம்மா உணவகங்களிலும், இரவு நேர உணவாக ரூ.3-க்கு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டமும் முதல்-அமைச்சரால் இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் போதுமான பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் இந்த திட்டம் இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் 6½ லட்சம் பனைமர கன்றுகள் நடும் திட்டமும் வனத்துறையினரின் கருத்தை கேட்டு பின்னர் தொடங்கப்பட உள்ளது.
 

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF

மாலை மலர்         20.11.2013 

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
 
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, நவ.20 - தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்கள்” முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் 19.2.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

பாரம்பரிய உணவு திருவிழா நகராட்சி தலைவர் சித்ரா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

பாரம்பரிய உணவு திருவிழா நகராட்சி தலைவர் சித்ரா தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை நகரசபையின் சார்பில் மகளிர்களுக்கு ஸ்ரீ தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செவிலியர் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சி மாணவிகளுக்கான பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

விழாவிற்கு தொண்டு நிறுவன நிர்வாகிகள் பெருமாள், அனிதா ஆகியோர் தலைமை தாங்கினர். நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) மணி முன்னிலை வகித்தார். சமுதாய அமைப்பாளர் சந்திரா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த உணவு திருவிழாவில் பயிற்சி மாணவிகள் தயாரித்திருந்த 60 வகையான பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் நகரசபை மேலாளர்கீதா,நகரசபை உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம், மணிகண்டன், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 79 of 841