Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செனாய் நகரில், ரூ.10 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன கலையரங்கம்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 28.09.2009

செனாய் நகரில், ரூ.10 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன கலையரங்கம்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப். 28-

சென்னை மாநகராட்சி சார்பில் செனாய்நகர் 8-வது குறுக்குத் தெருவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன கலையரங்கம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு, கலையரங்கம் கட்டும் பணியினை துரிதப்படுத்தினார்.

அதன் பின்பு அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி சார்பில் செனாய் நகரில் ரூ. 10 கோடியே 28 லட்சம் செலவில் குளிர் சாதன வசதிகளுடன் கூடிய நவீன கலையரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 200 பேர் அமரும் வகையிலும், நவீன கழிப்பறைகள், குளிய லறைகள் வசதிகளுடன் கலையரங்கம் கட்டப்படுகிறது.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழ்த்தளம், தரைத்தளம், பால்கனி முதல் தளம் என 63 ஆயிரத்து 400 சதுரஅடி அளவில் இந்த கலையரங்கம் கட்டப்படுகிறது. லிப்ட் வசதிகள், 200 கார்கள், 225 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி கள் அமைக்கப்படுகிறது. கலை யரங்கத்தை சுற்றி அழகிய புல்வெளிகள் அமைக்கப் படுகிறது. 18 மாதங்களில் இந்த கலையரங்கத்தை முடிக்க திட்டமிருந்தாலும், ஒப்பந்த காலத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Tuesday, 29 September 2009 11:51
 

சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 26.09.2009

சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு மேயர் வேண்டுகோள்


சென்னை, செப். 25: ""குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவதை அரசுத் துறைகள் தவிர்க்க வேண்டும்'' என்று சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், மின் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்போதே தொடங்குங்கள்... ""கடந்த ஆண்டு மழைக் காலத்தில் வெள்ளம் புகுந்த இடங்களை அடையாளம் கண்டு, அந்தப் பகுதிகளில் இப்போதே பணியாளர்களை அமர்த்தி மின்சாரம் கசியாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மின் துறை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்'' என்றார் ஆணையர் ராஜேஷ் லக்கானி.

மீன் வளத்துறை ஒத்துழைப்பில்லை: அப்போது, பேசிய தீயணைப்புத் துறை அதிகாரிகள், ""வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த 30 ரப்பர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ரப்பர் படகுகளுடன், கட்டுமரங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீன்வளத் துறையினர் போதிய ஒத்துழைப்பு தராததால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இரவில் மீட்புப் பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. படகுகளையும், அவற்றை இயக்க பணியாளர்களையும் அவர்கள் தரவில்லை'' என்றனர். இதைத் தொடர்ந்து, "மீன்வளத் துறை இந்த ஆண்டு போதிய ஒத்துழைப்பு தரவேண்டும்' என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு 200 கி.மீ.,க்கும் மேலாக சாலைகளில் பள்ளம் தோண்டி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் பணி செய்துள்ளது.

""மழை காலங்களில் இதுபோல் பணி மேற்கொள்வது, அதிக சாலை விபத்துகளை ஏற்படுத்தும். எனவே, அக்டோபர் 1-ம் தேதி முதல் சாலைகள் தோண்டுவதை நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் முழு தயார் நிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என மேயர் அறிவுறுத்தினார்.

"நெடுஞ்சாலைத் துறையினர், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா சாலை உள்ளிட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய்களில் தூர்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என்றார் அவர்.

ஆக்கிரமிப்புகளை விரைந்து... இதைத் தொடர்ந்து பேசிய ஆணையர் லக்கானி, ""சைதாப்பேட்டை அடையாறு ஆறு, விருகம்பாக்கம் கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் விரைந்து அகற்ற வேண்டும். தூர்வாரும்போது வெளிப்படும் கழிவுகளை, கால்வாய் ஓரம் சேமிக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.

ரயில்வே துறை கட்டுப்பாட்டில் வரும் ஐ.சி.எஃப். அருகில் உள்ள எய்ன்ஸ்லி கால்வாயில் பல மாதங்களாக தூர்வாரும் பணி நடைபெறவில்லை. அதை உடனடியாக ரயில்வே கவனிக்க வேண்டும்'' என்றும் அவர் கேட்டுகொண்டார்.

 

போக்குவரத்து நகரத்தில் தனியார் பங்கேற்புடன் வசதிகள்

Print PDF

தினமணி 25.09.2009

போக்குவரத்து நகரத்தில் தனியார் பங்கேற்புடன் வசதிகள்

புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் லாரிகள் நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள போக்குவரத்து நகரத்தில் தனியார் பங்கேற்புடன் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கூறினார்.

இப் பகுதியை ஆய்வுசெய்த அமைச்சர் நமச்சிவாயம், இது தொடர்பாக கூறியது:

போக்குவரத்து நகரம் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் போதிய வசதி இல்லாத நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இங்கு தங்களால் லாரிகளை நிறுத்த முடியவில்லை என்று அரசை அணுகியுள்ளனர்.

இதையொட்டி இப் பகுதியை ஆய்வு செய்து அந்தச் சங்க நிர்வாகிகளையும் அதிகாரிகளையும் அழைத்துப் பேசினோம். அதன் அடிப்படையில் தனியார் பங்கேற்புடன் கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை இந்த நகரத்தில் செய்ய உள்ளோம்.

லாரிகளுக்கான அலுவலகம், சரக்குகள் வைக்க கிடங்குகள், பஞ்சர் ஒட்டும் கடை, ஒர்க் ஷாப், டிரைவர்கள் தங்குமிடம், ஹோட்டல், டீக்கடை போன்றவை கட்டப்பட வேண்டும்.

மேலும் போலீஸ் பூத் ஒன்று அமைக்க வேண்டும், நடமாடும் போலீஸ் வேன் ஒன்று இந்த நகரத்தில் சுற்றி வர வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதை காவல்துறையினர் செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

அரசின் பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் இப் பகுதியில் இயங்கும் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

தனியார் பங்கேற்புடன் எந்த மாதிரியான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை திட்டமிட்டு அவற்றை அக்டோபர் 15-ம் தேதிக்குள் தயார் செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.

Last Updated on Friday, 25 September 2009 06:04
 


Page 787 of 841