Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி அலுவலகங்களில் குண்டு பல்புக்குத் தடை

Print PDF

தினமணி 10.09.2009

மாநகராட்சி அலுவலகங்களில் குண்டு பல்புக்குத் தடை

சென்னை, செப். 9: புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) முதல் குண்டு பல்புகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை அணைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 99 பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஏற்பாடு செய்ததற்காக மேயர் மா. சுப்பிரமணியனை, பிரிட்டன் தூதர் ரிச்சர்ட்ஸ் ஸ்டாக் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின் மேயர் அளித்த பேட்டி: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 13-ல் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறக்கும் குழந்தையின் வீட்டு முன் மாநகராட்சி சார்பில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை பசுமை பெறும்.

புவி வெப்பமயமாவதைத் தடுப்பது, மின் கட்டணத்தை சேமிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை முதல் குண்டு பல்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. குண்டு பல்புகளுக்கு பதிலாக சி.எப்.எல். பல்புகள் பயன்படுத்தப்படும். இதை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலங்களில் மின் கட்டணம் செலுத்தப்படுவதை ஆய்வு செய்து, குறைந்த அளவு மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

 

மதுரை மாநகரில் உள்ள சிலைகளை சுற்றி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 09.09.2009

மதுரை மாநகரில் உள்ள சிலைகளை சுற்றி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை; கமிஷனர் செபாஸ்டின் தகவல்

மதுரை, செப். 9-

மதுரை மாநகரினை அழகுப்படுத்துவது குறித்து கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் மாநகராட்சி கருத்தரங்கு கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:-

மதுரை நகரில் அரசு கட்டிடங்கள், மாநகராட்சியால் குறிப்பிட்டுள்ள முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் சுவரொட்டி விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

நகரின் அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று இடங்களை சுற்றியும், முக்கிய தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள இடங்களை சுற்றியும் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார்கள் சுவர் விளம்பரம் செய்தவற்கும் தடை செய்யப்பட்டு உள்ளயது.

இதனை மீறி அரசு கட்டிடங்கள் செயற்கை நீரூற்று இடங்கள், தலைவர்களின் சிலைகளை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்பவர்கள் மீதும், சம்பபந்தப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் தயார் செய்த அச்சக நிறுவனம் மற்றும் விளம்பரங்களில் உள்ள நிறுவனங்கள் மீது அபராதமாக ரூ.5 ஆயிரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், போக்குவரத்துக்கு இடையூராக மாடுகளை சாலைகளில் விடுதல் போன்றவர்கள் மீது மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ரூ.1 லட்சம் வரை அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அந்தந்த இடங்களிலேயே சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

மாநகராட்சி ஆடு வதைக் கூடம் கட்டுவதில் குளறுபடி?

Print PDF

தினமணி 07.09.2009

மாநகராட்சி ஆடு வதைக் கூடம் கட்டுவதில் குளறுபடி?

திருப்பூர், செப்.6: திருப்பூர் மாநகராட்சி சார்பில் தென்னம்பாளை யம் சந்தைப்பேட்டையில் கட்டப்படும் ஆடுவதைக் கூடம் கட்டுமான பணியில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமிச க்கடைகளில் ஆடுகளை சாலையோரங்களிலேயே வைத்து வெட்டுவதால் ஏற்படும் சுகாதாரப் பாதி ப்பை அடுத்து மாநகராட்சி சார்பில் ஆடு வதைக் கூடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறுதரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப் பட்டன. அதைத்தொடர்ந்து, அரசு நிதி, மாநகராட்சி பொதுநிதி என ரூ.51 லட்சம் மதிப்பில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் ஆடு வதைக்கூடம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2008 செப்.15-ல் பணி துவக்கப்பட்டது.

ஆடு வதைக்கூடம், கழிவறை உள்ளிட்ட அறைகள் கட்டுமானம் முடிந்துள்ள நிலையில் தற்போது வளாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிதுரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், அச்சுற்றுச்சுவர் அமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 7 அடி உயரத்தில், ஆயிரம் அடி நீளத்து க்கு கட்டப்படும் இந்த சுற்றுச்சுவரில் 80 பில்லர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் அஸ்தி வாரத்தில் இரும்பு கம்பிகள் கொண்ட வலை (படல்) அமைத்து அதன் மீது பில்லர் அமைக்கும் போதே நீண்ட வருடத்துக்கு சுவர் வலிமையாக நிற்கும்.ஆனால், குளறுபடியாக கம்பி படல் அமைக்காமலும், கண்துடைப்புக்காக ஒருசில பில்லர்களுக்கு மட்டும் வலை அமைத்தும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில், 15 கிலோ கொண்ட ஒரு கம்பிபடல் அமை க்க சுமார் ரூ.525 செலவாகிறது. அதன்படி 80 பில்லர்களுக்கும் சுமார் ரூ.42 ஆயிரம் ஏமாற்றப் படுவதாகவும் அப்பகுதி கட்டுமான தொழில் தெரி ந்தவர்கள் தெரிவித்தனர். இதனால், குறுகிய காலத்தில் சுவர்கள் வலுவிழந்து எதிர்காலத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் செயற்பொறியாளர் கண்ணனிடம் கேட்ட போது, தேவையான கம்பி படல்கள் அமைத்தே சுற்று சுவர்கள் கட்டப்படுகிறது. மேற்கொண்டு கட்டடங்கள் கட்டப்படுவதில்லை என்பதால் அந்த சுவருக்கு இந்த அமைப்பே போதுமானது என்றனர்.

ஆனால், இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் இப்போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வுப்பணிகள் நடத்தும் போது ஆடு வதைக்கூட கட்டடத்தின் கட்டுமானத் தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக் கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

"சந்தைப்பேட்டை ஆடுவதைக்கூடம் கட்டுமான பணி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மேலும் அப்பணி களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினு ம் பொதுமக்கள் தெரிவித்துள்ள இப்பிரச்னையின் மீது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும்' என்றார் மாநகராட்சி ஆணை யர் ஆர்.ஜெயலட்சுமி.

 


Page 803 of 841