Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மேடம்பாக்கம் பேரூராட்சியில் பூங்கா திறப்பு

Print PDF

தினமலர் 03.09.2009

l,

 

பொது இடத்தில் சுவரொட்டி திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார்

Print PDF

தினமணி 03.09.2009

பொது இடத்தில் சுவரொட்டி திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார்

பெங்களூர், செப். 2: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியதாக இரு கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் மாநகராட்சி ஆணையராக பரத்லால் மீனா பொறுப்பு ஏற்ற பிறகு நகரை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பொது இடங்களில் திரைப்பட மற்றும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் "செலுவின சிலிபிலி' "உல்லாசா உற்சாகா' ஆகிய கன்னட திரைப்படங்கள் அண்மையில் திரையிடப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் சுவரொட்டிகள் கெம்பே கெüடா சாலையில் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை.

எனவே செலுவின சிலிபிலி திரைப்படத் தயாரிப்பாளர் பி.என்.பவன்குமார், உல்லாசா உற்சாகா திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜ் ஆகியோர் மீது உப்பார்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் இந்தப் புகாரை அளித்துள்ளார். பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி பொது இடத்தை திரைப்படத் தயாரிப்பாளர்கள் அசுத்தப்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், பெங்களூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று புகாரில் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பொது இடங்களில் அசுத்தப்படுத்துதல் தடுப்புச் சட்டப்படி திரைப்படத் தயாரிப்பாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

தக்கலையில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்

Print PDF

தினமணி 03.09.2009

தக்கலையில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்

தக்கலை, செப். 2: தக்கலை-நாகர்கோவில் நெடுஞ்சாலை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க தடையில்லாச் சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் கோரியுள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதி மக்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இதையடுத்து, 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து ரெஜினால்டு எம்எல்ஏவும் பேரவைக் கூட்டத்தில் பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் சிறந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பேரவை மனுக்கள் குழுக் கூட்டத்தில் குழுத் தலைவர் அர. சக்கரபாணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. இக் குளம் விளையாட்டு மைதானம் அமைக்க சிறந்த இடம் என மாவட்ட விளையாட்டு அலுவலரும் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்களான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய அரசு புறம்போக்குப் பகுதி நீர்நிலைகளில் பல்வேறு நில உரிமை மாற்றம் செய்து பல்வேறு விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் பயன்பெறும் வகையில் இக் குளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நில உரிமை மாற்றம் இல்லாது தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர், சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அளிப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Page 805 of 841