தினமணி 01.09.2009
முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் ஒட்ட இன்று முதல் தடை
மதுரை, ஆக. 31: மதுரை நகரில் முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் ஒட்டவும் சுவர் விளம்பரங்கள் செய்யவும் செப்டம்பர் 1 முதல் மாநகராட்சி தடை விதித்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல விதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் மற்றும் பஸ் நிலையங்கள், தமுக்கம் மைதானத்தின் சுற்றுப்பகுதி, காந்தி மியூசியம் சாலை, அண்ணாநகர் பிரதானசாலை மற்றும் அரசுக் கட்டடங்கள், அரசு சார்புக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அதையொட்டியுள்ள முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது
மீறினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரித்துள்ளார்.