Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஸ்டாலின் தம்பதியை பாராட்டி சென்னை மாநகராட்சி தீர்மானம்

Print PDF
தினமணி 29.08.2009
ஸ்டாலின் தம்பதியை பாராட்டி சென்னை மாநகராட்சி தீர்மானம்
சென்னை, ஆக. 28: உடல் தானம் செய்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்காவதி ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பாராட்டு தீர்மானத்தை மேயர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசியது:

மியாட் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவதி ஸ்டாலினும் உடல் தானம் செய்வதாக அறிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தரணியில் தலை சிறந்த தானம் தன்னையே தருவது என்பார்கள். அதற்கேற்ப உடல் தானம் செய்வதாக அறிவித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டி மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.

Last Updated on Saturday, 29 August 2009 01:57
 

தமிழ் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

Print PDF

மாலை மலர் 28.08.2009

தமிழ் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

சென்னை, ஆக. 28-

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

திருவேங்கடம் (காங்.):- சென்னையில் வீடுகளுக்கு பழைய எண், புதிய எண் என்று இருப்பதை ஒரே எண்ணாக மாற்றி வழங்க வேண்டும். எழும்பூர் உள்பட பலபகுதிகளில் வீடுகள் இல்லாமல் பலர் குடிசைகளில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிசெய்து கொடுக்கவேண்டும்.

மேயர் மா. சுப்பிரமணியன்:- சென்னையை குடிசை இல்லா நகராக மாற்றுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு ரூ.130 கோடி ஒதுக்கியது. 2-வது கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 230 சதுர அடி நிலம் இருப்பவர்களுக்கு வீடுகட்ட மானியம் வழங்கப்படும் என்பது மத்திய அரசின்விதி.

ஆனால் சென்னையில் குடிசைவாசிகளிடம் 150 சதுர அடிக்கும் குறைவாகவே நிலம் இருக்கிறது. எனவே அந்த இடத்தில் கீழ்தளமும், மேல்தள கட்டிடமுமாக வீடு கட்டுவதற்கு அனுமதிக்கக்கோரி மத்திய அரசுக்குகடிதம் எழுதப்பட்டுள்ளது.

சுபா சந்திரபோஷ் (தி.மு..):- பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேயர்:- சென்னையில் பன்றிக்காய்ச்சல் நோய்பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை 30 குழுக்கள் அமைத்து சோதனை நடத்தி வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜெயராமன் (பா...):- பன்றிக்காய்ச்சல் பரவாமல்தடுக்க மாநகராட்சி தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவேண்டும். சென்னையில் எந்தஅரசியல் கட்சிக்கும் பாரபட்சம் இல்லாமல் ரோட்டு ஓரங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்றவேண்டும். புகையில்லா சென்னையை உருவாக்குவதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கை வேண்டும்.

சைதைரவி (காங்.):- பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையம் அனைத்து வசதிகளுடன் அனைத்து மண்டலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். சுவரொட்டிகளுக்கு தடைவிதித்த பிறகு அண்ணா சாலையில் சுவர் விளம்பரம் தென்பட தொடங்கியுள்ளது. இதைதடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பின்னர் கூட்டத்தில் இந்தநிதியாண்டில் தமிழிலில் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 7 ஆயிரம் மோதிரம் வாங்க ரூ.1 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கி அனுமதிவழங்கப்பட்டது.

 

பழனி புதிய பஸ் நிலையம் மாதிரி நிலையமாக அமையும்: அரசு செயலர்

Print PDF

தினமணி 28.08.2009

பழனி புதிய பஸ் நிலையம் மாதிரி நிலையமாக அமையும்: அரசு செயலர்

பழனி, ஆக. 27: பழனி புதிய பஸ் நிலையம் மாதிரி பஸ் நிலையமாக அமையும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியச் செயலர் நிரஞ்சன் மார்டி தெரிவித்தார்.

பழனியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தற்போதுள்ள பஸ் நிலையத்தை ஒட்டி பல ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.6 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்தப் பணிகளை அரசு செயலர் நிரஞ்சன் மார்டி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

குடிநீர் வடிகால் வாரியத் தலைமை பொறியாளர் ரகுநாதன், மதுரை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சீனி அஜ்மல்கான், மதுரை மண்டல நகராட்சிப் பொறியாளர் கருணாகரன், பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஹக்கீம், ஆணையர் காளிமுத்து, பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் ஆய்வின் போது பங்கேற்றனர்.

செயலர் நிரஞ்சன் மார்டி கூறியது:

இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் செப். இறுதியில் திறக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பழனி மட்டுமன்றி பொள்ளாச்சி, ஓசூர், பூந்தமல்லி, கொடைக்கானல் உள்ளிட்ட 6 நகராட்சிப் பகுதிகளில் பஸ் நிலையப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை விரைவில் முடிக்க துணை முதல்வர் ஆர்வமாக உள்ளார்.

பழனி நகராட்சி பஸ் நிலையம் மாதிரி நிலையமாக அமையும் அளவுக்கு பணிகள் சிறப்பாக உள்ளன. இங்கு 32 பஸ் ரேக்குகள் அமையவுள்ளது எனத் தெரிவித்தார்.

 


Page 810 of 841