Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை ‘அம்மா’ உணவகங்களில் நாளை மறுநாள் முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைக்கிறார்

Print PDF

தினத்தந்தி           19.11.2013

சென்னை ‘அம்மா’ உணவகங்களில் நாளை மறுநாள் முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைக்கிறார்

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்கும் நவீன எந்திரம் மூலம், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை மறுநாள் முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ‘காணொலி’ காட்சி மூலம் அறிமுகம் செய்து வைக்கிறார்.

அம்மா உணவகம்

சென்னையில் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 வார்டுகளிலும் சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை காலை உணவாக ஒரு இட்லி ரூ.1–க்கும், பொங்கல் ரூ.5–க்கும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மதிய உணவாக ரூ.5–க்கு சாம்பார் சாதமும், ரூ.5–க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதமும், ரூ.3–க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் மாலை நேர உணவாக ரூ.3–க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ரூ.3–க்கு 2 சப்பாத்திகள்

அதன்படி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் (புதன்கிழமை) முதல் மாலை நேர உணவாக ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் 14 மையங்களில் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்யும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில் சப்பாத்திகள் தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது. சோதனையில் சப்பாத்தியின் சுவையும், பருப்பு கடைசல் சுவையும் அருமையாக வந்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ‘காணொலி’ காட்சி மூலம்(வீடியோ–கான்பரன்சிங்)நாளை மாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.

தனியார் நிறுவனம்

அம்மா உணவகத்தில் சப்பாத்தி வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் சப்பாத்தி செய்வதற்கான கோதுமைகளை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் வழங்குகிறது.

சப்பாத்தி தயார் செய்யும் பணியினை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தான் நவீன சப்பாத்தி எந்திரங்களை கொள்முதல் செய்து வழங்கி உள்ளது.’ என்றார்.

 பார்சல் கிடையாது

  • ஒரு சப்பாத்தி 6 அங்குலம் அளவும், 30 கிராம் எடையும் கொண்டது.
  • சப்பாத்தியுடன் 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படும்.
  • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்திகள்(இருப்பு இருக்கும் வரை) கிடைக்கும்.
  • காலை மற்றும் மதிய உணவுகளை போன்றே சப்பாத்திகளுக்கும் பார்சல்கள் கிடையாது.
  • முதற்கட்டமாக ஒருநாளைக்கு ஒரு அம்மா உணவகத்துக்கு 2 ஆயிரம் சப்பாத்திகள் வீதம் 200 அம்மா உணவகத்துக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயார் செய்து வழங்கப்படும்.
  • 25 கிலோ கோதுமை மாவு நவீன எந்திரம் மூலம் 15 நிமிடங்களில் பிசையப்படுகிறது.
  • ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாத்திகள் வரை தயார் செய்யப்படுகிறது.
 

சென்னை அம்மா உணவகங்களில் இந்த வாரம் முதல் சப்பாத்தி

Print PDF

தினபூமி          18.11.2013

சென்னை அம்மா உணவகங்களில் இந்த வாரம் முதல் சப்பாத்தி

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Amma-Mess(C).jpg 

சென்னை, நவ.18 - சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்திகள் வழங்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த உணவகங்களில் ரூ. 3_க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து சப்பாத்தி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அனைத்து மண்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.

சப்பாத்தி தயாரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில், இந்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சப்பாத்திகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

13 ஆண்டுகளுக்கு பின் இளம் ஐ.ஏ.எஸ்., கமிஷனர்

Print PDF

தினமலர்         18.11.2013 

13 ஆண்டுகளுக்கு பின் இளம் ஐ.ஏ.எஸ்., கமிஷனர்

மதுரை : மதுரை மாநகராட்சியில் தொடர் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட, 13 ஆண்டுகளுக்கு பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவகங்கை கூடுதல் கலெக்டர் கிரண்குராலாவை, 35, கமிஷனராக அரசு நியமித்துள்ளது.சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சி மதுரை. ஆனாலும், மதுரையை பெரிய அளவில் அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குறை இருந்தது.

குறிப்பாக, நிர்வாக தரப்பில் நடந்த அதிகாரிகள் நியமனத்தில், கடந்த 2 ஆண்டுகளில் சொல்லும்படியாக அதிகாரிகள் யாரும் செயல்படவில்லை. மாறாக, சர்ச்சைகளிலும், முறைகேடுகளிலும், புகார்களிலும் சிக்கியவர்களாகவே வந்து சென்றனர். இதனால், முதன் முறையாக மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய அ.தி.மு.க., நெருக்கடியையும், விமர்சனத்தையும் சந்திக்க நேர்ந்தது. கமிஷனராக இருந்த நந்தகோபால், வேலூர் கலெக்டராக மாற்றப்பட்ட பின், புதிய கமிஷனர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

துணை கமிஷனர் லீலா, கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். முன்பு, நடராஜன் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற பின், 6 மாதங்களுக்கு கமிஷனர் நியமனம் நடைபெறவில்லை. "இந்த முறையும், அதேபோல்தான் நடக்கும்,' என்ற பேச்சு இருந்தது. இது ஒருபுறமிருக்க, கமிஷனர் பணியிடத்தை பெற, பலர் போட்டி போட்டனர். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, மாநகராட்சியின் புதிய கமிஷனராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார். 2002 ஜூன் 13 முதல் 2005 ஜன.,12 வரை பணியாற்றிய கார்த்திக்தான், மாநகராட்சியின் கடைசி நேரடி ஐ.ஏ.எஸ்., இளம் அதிகாரி; அதன் பின் வந்த நடராஜன், நந்தகோபால் ஆகியோர் பணிமூப்பு அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்கள்.

மாநகராட்சி சந்தித்து வரும் தொடர் சர்சைகளுக்கு முடிவு கட்டவே, 13 ஆண்டுகளுக்கு பின், நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளனர். கிரண் குராலாவிடம் கேட்ட போது ,""நியமனம் குறித்து, இப்போது தான் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பொறுப்பேற்கும் நாள் குறித்து, நாளை (இன்று) தான் தெரியவரும்; உரிய பணியை மேற்கொள்வேன்,'' என்றார். இவர், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வு பெற்றார். சிவகங்கைக்கு முன் கடலூர் சப்கலெக்டராக இருந்தார்.

வேலை செய்தது லீலா கடிதம்: மாநகராட்சி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்த துணை கமிஷனர் லீலா, ஆய்வுக்கு பிறகே, தன்னிடம் வரும் ஆவணங்களிலும், அனுமதி கோப்புகளிலும் கையெழுத்திட்டார். பொறுப்பு வகித்த சில வாரங்களிலேயே, மாநகராட்சியின் நிலவரங்களை புரிந்து கொண்டார்.

முறைகேடான கடைகளுக்கு அனுமதிகேட்டு கவுன்சிலர் ஒருவர் அணுகிய போது, "விதிமுறை மீறி, நீங்கள் செயல்பட்டால், மேடத்திற்கு(முதல்வர்) கடிதம் அனுப்பிவிடுவேன்,' என எச்சரித்தார். ஒரு கட்டத்தில், மாநகராட்சியில் நடப்பதை அரசுக்கு தெரிவிக்க முடிவு செய்த லீலா, சில திட்டங்களில் நடந்த முறைகேடு, பணியாளர் நியமன முறைகேடுகள் குறித்து, அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன் வெளிப்பாடுதான், "கறார்' கமிஷனர் நியமனம் நடந்துள்ளது. 

 


Page 82 of 841