தினமணி 25.08.2009
கடந்த ஒரு மாதத்தில் நாய் கடித்த 1267 பேருக்கு சிகிச்சை
சேலம், ஆக.24: சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கடித்ததாக 1267 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
சேலத்தில் தெருநாய்கள் பெருக்கம் அதிக அளவில் உள்ளது. வீதிகளில் சுற்றித் திரியும் இவற்றை அவ்வப்போது மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பிடித்து கால்நடை மருத்துவர்களின் உதவியோடு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கடித்ததாக 1267 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். நாய்கள் இனப்பெருக்கத்தைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.