தினமணி 23.08.2009
ரூ.50 லட்சத்தில் நகராட்சி புதிய அலுவலக கட்டட பணி தொடக்கம்
வந்தவாசி, ஆக. 22: வந்தவாசி நகராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடத்துக்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
தரைத்தளம் மற்றும் மேல்தளம் கொண்ட கட்டடமாக இந்த அலுவலகம் அமையவுள்ளது.
இதற்கான நிதி நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.25 லட்சமும், அரசு நிதி ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளையொட்டி வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
ஆணையர் எஸ். சசிகலா, பொறியாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் வாசுகி, கவுன்சிலர்கள் அ.மு. உசேன், வி. ரவிச்சந்திரன், த. பழனியம்மாள், ப. மச்சேந்திரன், அ. விஜயன், ஒப்பந்ததாரர் எஸ். தர்மதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.