Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் நடுவதை சட்டபூர்வமாக்க முயற்சி

Print PDF

தினமணி 24.08.2009

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் நடுவதை சட்டபூர்வமாக்க முயற்சி

திருப்பூர், ஆக.23: உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் குறிப் பிட்ட அளவு மரக்கன்றுகள் நட்டுவளர்ப்பதை சட்ட பூர்வமாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரேநாளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பசுமை திருப்பூர் இயக்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவுக்கு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கினார்.

திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி பேசியது:

தொழில்வளம் பெற்ற திருப்பூர் ஒருபுறம் பனியன் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு அதிகளவில் பொருள் வளம் தேடிதருவதுடன், வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருகிறது.

ஆனால், அதற்கு மாறாக மற்றொரு புறம் சாயக்கழிவால் மாசுபட்ட நொய்யல் ஆற்றின் மூலம் திருப்பூரும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை நிவர்த்தி செய்ய தொழில்துறையினர் பெரும் முயற்சிகள் மேற் கொண்டுள்ளனர். அதேபோல் திருப்பூரில் அளவுக்கு அதிகமான இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்றும் மாசுப்பட்டு சுற்றுச் சூழலை பாதிக்கிறது.

இவ்விரு காரணங்களால் திருப்பூரில் மனித வளமும், மண்வளமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பாதிப் பிலிருந்து திருப்பூரை பாதுகாக்க ஈஷா யோகா மையம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.

மரக்களை வெட்டி காடுகளை அழிப்பதால் தட்பவெப்ப நிலை மாறி வறட்சி நிலையை உலகம் எதிர்கொண்டு ள்ளது. இதேநிலை நீடித்தால் குடிநீரும் பாதிக்கும் அபாயமுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதை தடுத்து பூமியின் தட்பவெப்பநிலையை சீராக்க மரங்கள் நடுவது அவசியம்.

ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகள் நடுவதை சட்டபூர்வமாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் தமிழகத்தை விரைவில் பசுமையாக்க முடியும் என்றார்.

பசுமைத்தூதராக பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது:

குட்டி ஜப்பான், தொழில் மாநகர், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பகுதி என்று பெருமையோடு திருப்பூர் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மறுபுறத்தில் ஆறுகள் வறண்டு நிலத்தடி நீர் கீழே சென்று கொண்டிருப்பது தெரிவதில்லை.

எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு ஒரு சிறிய விஷயமே. அதேபோல் திருப்பூருக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்னைக்கு மரம் நடுவதே தீர்வு. அதன்படி பசுமை திருப்பூர் இயக் கம் மூலம் நடப்படும் இம் மரக்கன்றுகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.

நடிகை ஸ்ரேயா: எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளிப்பது மரங்கள் மட்டுமே. அவற்றை பெரிய அளவில் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அவசியமில்லை. இருப்பினும் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜன், குளிர்ச்சியை மரங்கள் அளித்து வருகின்றன. அப்படிப்பட்ட மரங்களை பசுமை திருப்பூர் இயக்கம் மூலம் வளர்த்து பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்.

 

பன்றிகளுக்கு தடை

Print PDF

தினமணி 23.08.2009

பன்றிகளுக்கு தடை

சிவகாசி, ஆக. 22: சிவகாசி நகராட்சி எல்லைக்குள் பன்றிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையாளர் எஸ். விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகாசி நகராட்சிப் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் கட்டுக்குள் உள்ளது. நகராட்சி எல்லைக்கு அருகே வளர்க்கப்படும் பன்றிகள், நகர எல்லைக்குள் வந்தால் அவை பிடிக்கப்படும். அந்த பன்றிகள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது.

Last Updated on Monday, 24 August 2009 06:03
 

பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 22.08.2009

பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு

கன்னியாகுமரி, ஆக. 21: கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி கடற்கரை சுனாமி பூங்கா, தமிழன்னை பூங்கா, காந்தி நினைவு மண்டப பூங்கா, காமராஜர் மணிமண்டப பூங்கா, சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட்டார்.

மேலும், பரமார்த்தலிங்கபுரத்தில் ரூ.87 லட்சத்தில் அண்மையில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரிக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.

முன்னதாக, மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் மூலம் நிறைவேற்றப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் கன்னியாகுமரி அரசினர் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஆனந்த நடராஜன், உதவி இயக்குநர் (பொறுப்பு) பாலசந்திரன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா, மாவட்ட சுற்றுலா உதவி அலுவலர் மாலையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 


Page 818 of 841