Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இலந்தைகுளம் பொழுதுபோக்கு பூங்கா: தனியார் பங்கேற்புடன் நிறைவேற்ற முடிவு

Print PDF

தினமணி 19.08.2009

இலந்தைகுளம் பொழுதுபோக்கு பூங்கா: தனியார் பங்கேற்புடன் நிறைவேற்ற முடிவு

திருநெல்வேலி, ஆக. 18: பாளையங்கோட்டை இலந்தைகுளத்தில் அமைக்கப்படவுள்ள பொழுதுபோக்கு பூங்கா, நேருஜி சிறுவர் பூங்காவில் அமைக்கப்படவுள்ள பல்நோக்குக் கலையரங்கு ஆகிய 2 திட்டங்களையும் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இலந்தைகுளத்தில் ரூ. 1.5 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும், நேருஜி சிறுவர் பூங்காவில் ரூ. 5.10 கோடியில் பல்நோக்குக் கலையரங்கு கட்டவும் திட்டமிடப்பட்டது.

இவ்விரு திட்டங்களையும் மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இத் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ள இடங்களை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனக் குழுவினர் கடந்த 14-ம் தேதி பார்வையிட்டுச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து இவ்விரு திட்டங்களையும் பொதுமக்கள்-தனியார் பங்களிப்புடன் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் நிறுவனம் இத் திட்டங்களை நிறைவேற்றி, இயக்கி பின்னர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்.

அதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தின் மானியம் அல்லது அடையாறு பூங்கா அறக்கட்டளை அல்லது திட்ட உருவாக்கல் மானிய நிதி

ஆகிய ஏதேனும் ஒன்றில் இருந்து நிதியுதவி பெற நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கோரிக்கை விடுத்து புதன்கிழமை நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

 

மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் ""செயற்கைத் தீவுடன் பறவைகள் சரணாலயம்''

Print PDF

தினமணி 18.08.2009

மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் ""செயற்கைத் தீவுடன் பறவைகள் சரணாலயம்''
மதுரை, ஆக. 17: மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் "செயற்கைத் தீவு' அமைத்து, அதில் பறவைகள் சரணாலயம் அமைக்க மாநகராட்சி மூலம் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை வண்டியூர் கண்மாய் சுமார் 687 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய்க்கு பருவ காலங்களில் அதாவது ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சாதாரண மற்றும் அரிய வகையான பாம்புதாரா, உல்லான், சிறை ஈ, நத்தை கொத்தி நாரை, பெலிகென்ஸ், பூலைக்கிடாய் என 500-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இப்பறவைகளுக்கு கண்மாய் பகுதியில் சரணாலயம் அமைத்தால் அவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக பறவைகள் ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், "சர்வதேச பறவைகள் வாழ்வாதாரம்' என்ற அமைப்பின் இந்திய பங்குதாரரான "மும்பை நேட்சுரலிஸ்ட்ஸ் சொûஸட்டி' மதுரை வண்டியூர் கண்மாய், வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் கண்மாய் போன்றவற்றை "பறவைகளுக்கான முக்கிய தலமாக' ஐம்ல்ர்ழ்ற்ஹய்ற் ஆண்ழ்க்ள் அழ்ங்ஹ) அறிவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட வனத்துறையினருக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி வண்டியூர் கண்மாயை ஆய்வு செய்த வனத்துறை, வண்டியூர் கண்மாயில் "பறவைகள் சரணாலயம்' அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

"செயற்கைத் தீவு': இக் கண்மாயின் மையப் பகுதியில் மணல் தோண்டி அவற்றை 3 மெகா திட்டுக்களாக அமைத்து, திட்டுக்கள் பகுதியில் பறவைகள் தங்கி கூடு கட்டி, இனப்பெருக்கும் செய்ய ஏதுவாக ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் உள்ளிட்டவை நடவும், கண்மாய் கரைப் பகுதியில் நீர் மருது, இலுப்பை, அத்தி உள்ளிட்ட மரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனித் தனி திட்டுக்கள் அமைக்கப்படுவதால் கண்மாயில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து, பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு மையமாக இப்பகுதியை உருவாக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் பத்ரி நாராயணன் கூறுகையில், தற்போதைய நிலையில் வண்டியூர் கண்மாய்க்கு 500-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. பறவைகளுக்கு கூடு கட்டவும், இனப் பெருக்கம் செய்யும் வகையிலும் சரணாலயம் போல் ஏற்பாடு செய்தால் வெளி நாட்டுப் பறவைகள் உள்ளிட்ட சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இப்பகுதிக்கு வந்துசெல்ல வாய்ப்புள்ளது என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் பாலாஜி கூறுகையில், இக் கண்மாய் பொதுப்பணித்துறைக்கு உள்பட்டதால் சரணாலயம் அமைக்கும் முயற்சிக்கு முதலில் பொதுப்பணித் துறையும், அதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை அனுமதி அளிக்கவேண்டும் என்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் கூறுகையில், வண்டியூர் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க ரூ. 25 கோடி மதிப்பிலான திட்டம், மாநகராட்சி மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Tuesday, 18 August 2009 04:58
 

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

Print PDF

மாலை மலர் 17.08.2009

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

சென்னை, ஆக. 15-

உலகின் மிக அழகான நீண்ட கடற்கரை என்ற பெருமை சென்னை மெரீனா கடற்கரைக்கு உள்ளது. இந்த கடற்கரை சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களும் மெரீனா கடற்கரைக்கு பொழுது போக்க வரத்தவறுவது இல்லை. எத்தனை தடவை சென்றாலும் சலிப்பே தராத மெரீனா சமீப காலமாக மாசுபட தொடங்கியது. இதையடுத்து மெரீனா கடற்கரையை சுத்தமாக்கி அழகுபடுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டது. அடுத்து உயரமாக தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டன. பிறகு அழகு தரும் புல்வெளிகள் உருவாக்கப்பட்டன.

அடுத்தக் கட்டமாக மெரீனாவில் குப்பைகள் சேருவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மெரீனாவுக்கு வரும் காதலர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மூலம் தான் கடற்கரை அதிகமாக அசுத்தமாகிறது.

இதை தடுப்பதற்காக மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (சனி) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மெரீனாவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது

 


Page 822 of 841