தினமணி 30.07.2009
பெங்களூர் மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா: பேரவையில் நிறைவேறியது
பெங்களூர், ஜூலை 29: பெங்களூர் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 200ஆக உயர்த்தி அமைத்துக் கொள்ள உதவும் மாநகராட்சி திருத்தத் சட்டத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.
இந்த திருத்த மசோதாவை புதன்கிழமை சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், பெங்களூர் மாநகராட்சியில் வார்டுகளை பராமரிக்க வசதியாக மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்மூலம் பெங்களூர் மாநகராட்சியில் வார்டு ஒன்றில் 30 ஆயிரம் மக்கள் தொகை இருக்க வகை செய்யவும் 200 வார்டுகளாக பிரித்துக் கொள்ளவும் இந்தத் திருத்தம் வகை செய்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் முதன்முதலாக வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இந்த இயந்திரத்தை பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இதற்காக அரசு ரூ.11 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.
அதன்பிறகு இச்சட்டம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
முத்திரைச் சட்டத்தில் சலுகை அளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட கர்நாடக முத்திரை சட்ட மசோதா 2009 சட்டமும் நிறைவேறியது.