Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் "உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க கடனுதவி'

Print PDF

தினமணி 30.07.2009

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் "உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க கடனுதவி'

ஈரோடு, ஜூலை 29: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ஏகாம்பரம் கூறினார்.

ஈரோடு மாவட்ட சிறுதொழில் உரிமையாளர்கள் சங்கம் (எடிசியா) சார்பில் அரிசி சார்ந்த பொருள்கள் தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கம் ஈரோட்டில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

தொழிலதிபர் சாந்திதுரைசாமி குத்து விளக்கேற்றி, கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். எடிசியா தலைவர் மயில்சாமி, செயலர் வெங்கடேஷ், முன்னாள் தலைவர் சுந்தரம், டிஎன்எப்சி தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தனர்.

ஏகாம்பரம் பேசியது: அரிசி சார்ந்த, மதிப்பூட்டப்பட்ட பொருள்களின் வர்த்தக வாய்ப்பு கூடியுள்ளது. குண்டடம், தாளவாடி, தாராபுரம், அந்தியூர் போன்ற பின்தங்கிய பகுதிகளில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மானியக் கடனுதவியை அரசு வழங்கியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மானியக்கடனுதவி வழங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விதிமுறையைத் தளர்த்தி, அப்பகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க கடனுதவி வழங்க அனுமதிக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதையேற்று, கடந்த சில தினங்களுக்குமுன் நடைபெற்ற ஊரக தொழில்துறை மானியக்கோரிக்கையின்போது, அனைத்து ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க மானியக்கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் கிடைத்து விடும். அதற்குப் பின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான கடனுதவிகோரி விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டில் சிறு தொழிற்சாலைகள் துவங்க ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 சத மின்கட்டணச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி, ஏராளமானோர் தொழில்துவங்க முன்வர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி டீலர்கள் சம்மேளன ஆலோசகர் கே.எஸ்.ஜெகதீசன் பேசியது:

அரிசி ஆலை உரிமையாளர்கள், நிறைய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அரிசியிலிருந்து ஒயின், அரிசி குருணையை பயன்படுத்தி ரவை, மாவு, நூடுல்ஸ் போன்ற பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும்.

தற்போது ஈரோடு, காங்கேயம் பகுதிகளிலிருந்தும் நல்ல ரக அரிசி கிடைக்கிறது. ஈரோட்டில் நெல், அரிசி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரிசி சார்ந்த உபபொருள்களைத் தயாரிக்கும் மையம் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

 

சில்வர் பீச்சை சீரமைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 30.07.2009

சில்வர் பீச்சை சீரமைக்க நடவடிக்கை

கடலூர், ஜூலை 29: கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சில்வர் பீச் கேட்பாரற்று சீர்குலைந்து காணப்படுகிறது.

பல லட்சம் செலவு செய்து, சிமெண்ட் சாலைகள், உப்பங்கழியில் படகுச் சவாரி, சிறுவர்களுக்கு விளையாட்டுப் பூங்கா, கடலின் அழகைக் கண்டு ரசிக்க கோபுரம், தொண்டு நிறுவனம் அமைத்துக் கொடுத்த பூங்கா என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், சுனாமியில் இவற்றில் பல சேதம் அடைந்தன. பின்னர் மாவட்ட நிர்வாகம் ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவிட்டு, சில வசதிகளை சரிசெய்து கொடுத்தது. எனினும் கடந்த காலங்களில் பராமரிப்பு இன்மையால், படகுக் குழாம் உள்ளிட்ட பல வசதிகள் சிதைந்துவிட்டன.

சமீப காலமாக உப்பங்கழிகளில் நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடி படகுகளால், பொதுமக்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கிறது. மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த மேடை சேதம் அடைந்துவிட்டது. இங்கு சுற்றுலாத்துறை மூலம் விடப்பட்ட படகுகள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. கடற்கரைக்கு வருவோர் பலர், மீன் பிடிப் படகுகளில் கட்டணம் கொடுத்து, உப்பங்கழியில் சவாரி செல்கிறார்கள்.

கடல் சீற்றத்தால் சிமெண்ட் சாலை உடைந்து கிடக்கிறது. பொதுமக்கள் அமர்வதற்கு போடப்பட்ட இருக்கைகள் காணாமல் போயிற்று.

ஆண்டுதோறும் நடைபெறும் சில்வர் பீச் கோடை விழா, மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி இந்த ஆண்டு நடைபெறவில்ல. கோடை விழாவை முன்னிட்டு, சில்வர் பீச்சில் செப்பனிடும் வேலைகள் பலவும் நடைபெறுவது உண்டு.

ஆனால், எல்லாம் சிதைந்து போயினும், கடற்கரைக்கு வரும் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரரின் வசூல் வேட்டை தொடர்கிறது. கார்களுக்கு ரூ.10, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, சைக்கிள்களுக்கு ரூ.2 வசூலிக்கப்படுகிறது. கடற்கரைக்கு காற்று வாங்க வருவோரிடமும் கட்டணம் வசூலிப்பது, கடலூர் சில்வர் பீச்சில் மட்டுமே.

இந்த நிலையில் சீர்குலைந்து காணப்படும் சில்வர் பீச்சை, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், புதன்கிழமை காலை பார்வையிட்டார். சிதைந்து கிடக்கும் படகுக் குழாம் உள்ளிட்டவற்றைச் சீரமைக்க, மதிப்பீடு தயாரிக்குமாறு, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் உள்ளிட்டோர் வந்து இருந்தனர்.

 

நவீன இறைச்சிக் கூடம்- பண்டக சாலை செயல்பாடு சென்னை மாநகராட்சிக்கு 3 சர்வதேச தரச்சான்று

Print PDF

மாலை மலர் 29.07.2009

நவீன இறைச்சிக் கூடம்- பண்டக சாலை செயல்பாடு சென்னை மாநகராட்சிக்கு 3 சர்வதேச தரச்சான்று

சென்னை, ஜூலை. 29-

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி தனது சேவை பணிகளில் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்கள் செய்து வருகின்றது.

சென்னை மாநகராட்சி செயல்பாடுகளின் தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மின்துறை பண்டகச்சாலை மண்டலம்- 4ல், வில்லிவாக்கம் மற்றும் மண்டலம்-9ல் சைதாப்பேட்டை நவீன இறைச்சிக் கூடங்களின் செயல் பாடுகள் மேம்படுத்த வதற்காக ஆலோசனைகள் பெற்று அபிவிருத்தி பணிகள் செய்து சர்வேதேச தரச்சான்றிதழ் (.எஸ்..) பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.

இங்கிலாந்தைச் சார்ந்த நிறுவனம் வில்லிவாக்கம் இறைச்சிக் கூடத்தையும், சைதாப் பேட்டை இறைச்சிக் கூடத்தையும், மின்துறை பண்டக சாலையிலும் ஆய் வுகள் மேற்கொண்டது.

சென்னை மாநகராட்சி பண்டகசாலை மற்றும் நவீன இறைச்சி கூடங்களின் செயல்பாடுகள் சர்வ தேச நிர்ணய கோட்பாடுகளின் படி உள்ளதால் அதற்கான உலகதரச் சான்றிதழ்கள் வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச் சிக் கூடங்களுக்கும், மின்துறை மாநகராட்சி பண்டக சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சர்வேதச சான்றிதழ்கள் கிடைக்கப்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இறைச்சிகூடங்களில் 6 ஆடுகள் அறுக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அறுக்கப்படும் ஆடுகள் எளி தாக நகருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆடு அறுக்கும் அறையிலிருந்து வெளி வரும் அறுக்கப்பட்ட ஆடுகளின் தோல் உரித்தல், கழிவுகள் அகற்றுதல் போன்ற பணிகள் வரிசையாக நடைபெற்று பயன்படுத்தப்பட வேண்டிய இறைச்சி பகுதி மட்டும் கடைசி பகுதியில் இறக்கப்பட்டு தண்டவாளத்தில் அமைக்கப் பட்டுள்ள கொக்கிகள் மூலம் ஆடுகள் அனைத்தும் அறுப்பு அறைகள் நோக்கி நகரும் வண்ணம் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதில் சிறப்பு அம்சமாக தனியாக ஆடுகள்தங்கு வதற்கு கூடமும், உள் உறுப் புகள் சுத்தம் செய்வதற்கான இடங்களும், மின் விசிறிகள், முதல் உதவிப் பெட்டிகள், தீயணைப்பு உபகரணங்கள், காட்சிப்பலகைகள் போன்ற வைக்காக சர்வதேச தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று மாநகராட்சி மின் பண்டங்கசாலையில் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனியாக அடுக்குகள், உரிய பதிவேடுகள் பராமரித்தல், மின் விசிறிகள், முதல் உதவிப் பெட்டி, தீயணைப்பு உபகர ணங்கள், காட்சி பலகைகள் அமைப்பதற்காக சர்வதேச தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பூரில் நவீன இறைச்சிக்கூடப்பணிகள் ரூ. 60 கோடியில் தொடங்கப் பட்டுள்ளது. இப்பணிகள் 21 மாதத்தில் முடிக்கப்படும், என்றார். பேட்டியின்போது ஆணை யாளர் ராஜேஷ் லக்கானி எதிர் கட்சித்தலைவர் சைதை ப.ரவி உடன் இருந்தனர்.

 


Page 829 of 841