Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தீபாவளி பண்டிகையையட்டி அம்மா உணவகங்கள் இன்று செயல்படும்

Print PDF

தினத்தந்தி             02.11.2013

தீபாவளி பண்டிகையையட்டி அம்மா உணவகங்கள் இன்று செயல்படும்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதல்&அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 200 அம்மா உணவகங்களிலும் மலிவு விலையில் தரமான, சுத்தமான உணவுகளை வழங்கி பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தீபாவளித் திருநாளான இன்று (சனிக்கிழமை) சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 அம்மா உணவகங்களும் செயல்படும் எனவும், தீபாவளித் திருநாளையட்டி 200 அம்மா உணவகங்களிலும் இன்று காலை வேளையில் சிற்றுண்டி சாப்பிட வரும் பொதுமக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

நல்லூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் விசாலாட்சி தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            02.11.2013

நல்லூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் விசாலாட்சி தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் 3-வது மண்டல பகுதியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.  மண்டல தலைவர் டெக்வெல் முத்து தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் வரவேற்றார். துணை மேயர் குணசேகரன், உதவி ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு பேரணியை திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் திருப்பூர் முதலிபாளையம் பெம்பள்ளி (சி.பி.எஸ்.சி) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த அட்டைகள் தாங்கியபடி ஊர்வலமாக சென்றனர். நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்தின் முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் மண்டல அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரணி முடிவில் பெம்பள்ளி முதல்வர் கவுசல்யாராஜன் நன்றி கூறினார். இந்த பேரணியில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அம்மா உணவகங்களில் நாளை இலவச இனிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

மாலை மலர்          02.11.2013

அம்மா உணவகங்களில் நாளை இலவச இனிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

முதல்– அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 200 அம்மா உணகங்களிலும், மலிவு விலையில் தரமான, சுத்தமான உணவுகளை வழங்கி பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தீபாவளித் திருளான நாளை (2–ந்தேதி) சென்னை மாநகராட்சியில் உள்ள 200 அம்மா உணவகங்களும் செயல்படும் எனவும், தீபாவளித் திருநாளையொட்டி 200 அம்மா உணவகங்களிலும் நாளை காலை வேளையில் சிற்றுண்டி சாப்பிட வரும் பொது மக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 87 of 841