Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தொட்டியம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்           29.10.2013

தொட்டியம் பேரூராட்சி கூட்டம்

தொட்டியம், : தொட்டியத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி திருஞானம் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ஐயப்பன், செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து உள்ளதை சீரமைத்து தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தமிழ்செல்வி உறுதியளித்தார். கவுன்சிலர்கள் கவியரசன், ரமேஷ், பொன்னுசாமி, சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தர் சம்பத் நன்றி கூறினார்.

 

பெ.நா.பாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்

Print PDF

தினமணி             29.10.2013

பெ.நா.பாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்

பெரிநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் துவாரகநாத் சிங் முன்னிலை வகித்தார்.

துப்புரவுப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணியாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலா 2 செட் புத்தாடைகளை வழங்கினார்.

இதில் துணைத் தலைவர் சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவம், கவுன்சிலர்கள் மாரியப்பன், காளியண்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

Print PDF

தினமலர்             29.10.2013

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்ரமிப்புகள் அகற்றுதல், தெருவிளக்கு சரி செய்தல், கழிப்பிட பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் தள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நகர பொறியாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ் மற்றும் உதவி கமிஷனர்கள், உதவி செயற்பொறியாளர்கள் பங்கேற்றனர்.

 


Page 91 of 841