Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி            21.10.2013

ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.சின்னச்சாமி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

விழாவில் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி கலந்து கொண்டு 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

விழாவில் கிழக்கு மண்டலக்குழுத் தலைவர் கே.ஆர்.ஜெயராமன், முதன்மைக் கல்வி அலுவலர் எ.ஞானகவுரி, மாநகராட்சி உதவி கமிஷனர் கார்த்திக், கவுன்சிலர்கள் முத்துசாமி, சேர்வராஜ் மாரப்பன், ராமசாமி, சால்ட் வெள்ளியங்கிரி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முன்னோடிகளாக வேண்டும்

Print PDF

தினமலர்             09.10.2013

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முன்னோடிகளாக வேண்டும்

கோவை:""மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடிகளாக திகழ வேண்டும்,'' என, மேயர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் தினவிழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

இவ்விழாவில், மாநகராட்சி மேயர் வேலுச்சாமி பேசியதாவது :

மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், மன அமைதிக்காக யோகா மற்றும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி பள்ளி மாணவர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதுடன் ஆசிரியர்களையும் கவுரவிப்பது பாராட்டுக்குரியது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடிகளாக திகழ வேண்டும், என்றார்.

விழாவில், மாநகராட்சியிலுள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 27 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 139 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாநகராட்சி மேயர் வழங்கினார். விழாவில், மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் மாணிக்கம், பொருளாளர் சுந்தரம், நிகழ்ச்சிக்குழு தலைவர் சண்முகம் பேசினர்.

 

தாம்பரத்தில் ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட முத்துரங்கம் பூங்கா 15–ந்தேதி திறப்பு

Print PDF

தினத்தந்தி               09.10.2013

தாம்பரத்தில் ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட முத்துரங்கம் பூங்கா 15–ந்தேதி திறப்பு

தாம்பரம் நகராட்சி முத்துரங்கம் பூங்கா ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன் திகழும் இந்த பூங்கா வருகிற 15–ந்தேதி திறக்கப்படுகிறது.

ரூ.1 கோடியில் பூங்கா சீரமைப்பு

தாம்பரம் நகராட்சியில் 3.78 ஏக்கரில் நகரின் மையபகுதியில் உள்ளது முத்துரங்கம் பூங்கா. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டது.

பூங்காவின் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும், பசுமை புல்வெளிகள், செயற்கை குளம், விலங்குகளின் சிலைகள், 2 செயற்கை நீருற்றுகள், சிறுவர் விளையாட்டு திடல், பூப்பந்து விளையாட்டு திடல், 725 மீட்டர் நீளம் நடைபாதை, பொதுமக்கள் பயன்படுத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

15–ந்தேதி திறப்பு

புதுப்பொலிவுடன் திகழும் முத்துரங்கம் பூங்கா 15–ந்தேதி திறக்கப்பட உள்ளது. பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. திறப்பு விழா நடைபெற உள்ளதை யொட்டி பூங்காவை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் எம்.எல்.ஏ. ப.தன்சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ளே, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், தாம்பரம் நகராட்சித் தலைவர் ம.கரிகாலன், ஆணையாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

 


Page 96 of 841