Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி? நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினமணி             23.08.2013

மழைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி? நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

விழுப்புரம் நகரில் மழையால் ஏற்படும் நிலைமைகளை சமாளிப்பது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையருடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

 நகர் மன்றத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்குவது, அவற்றை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்–டாப் மேயர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி              23.08.2013 

காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்–டாப் மேயர் வழங்கினார்

 

 

 

 

 

 

காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலை பள்ளியில் 144 மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார்.

மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 144 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் தம்பி மகன் புகழனார், வட்டார கல்விக்குழு உறுப்பினர் கோரந்தாங்கல் குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பி.நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவப்பிரகாசம், மாநகராட்சி கவுன்சிலர் இளவரசி ஏழுமலை, நிர்வாகிகள் திலகம், தா.ச.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முனிசாமி நன்றி கூறினார்.

 

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி              23.08.2013 

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெத்தநாயக்கன்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் ஆர்.பி.ராமகிருஷ்னன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாதேஸ்வரன் வரவேற்றார். மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்களை மாணவ–மாணவிகள் ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றார்கள். இதில் துணை தலைவர் சுகந்தி, வார்டு உறுப்பினர்கள் காஞ்சனா, அருணாசலம், சந்திரா, வெங்கடேஷ், சுப்பிரமணியன், பானுமதி, அண்ணாமலை, உமா, பெருமாயி,சீதாரமன், சத்தியசீலன்,ஜெயமணி மற்றும் அலுவலக பணியாளர்கள் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிகுழுவினர் கலந்து கொண்டார்கள்.

 


Page 108 of 841