Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தனர் மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த போலீசார்

Print PDF
தினகரன்                19.08.2013

சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தனர் மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த போலீசார்


கோவை, : கோவை கருப்ப கவுண்டர் வீதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் நேற்று சுத்தம் செய்து வண்ணம் பூசினர்.

கோவை மாநகர போக்குவரத்து போலீசார் காவல்துறை பணிகளோடு பொதுமக்களுக்கு பயனுள்ள சமூகசேவை பணிகளில் கவனம் செலுத்தி, அப்பணிகளை வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் துணை கமிஷனர் (போக்குவரத்து) ராஜசேகரன் மேற்பார்வையில் கோவை மாநகர கிழக்கு மற்றும் மேற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள், அரசு மாணவ, மாணவிகளின் விடுதிகள் போன்றவற்றை பராமரிப்பு செய்யும் பணியை வாரத்திற்கு ஒருநாள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா (மேற்கு போக்குவரத்து பிரிவு), இன்ஸ்பெக்டர் சரவணன்(மேற்கு போக்குவரத்து பிரிவு) ஆகியோர் தலைமையில் 5 சப் - இன்ஸ்பெக்டர்கள், 35 போலீசார் கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 7 மணி முதல் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்கள், காய்ந்த செடி, கொடிகளை அகற்றினர். பள்ளி கட்டட சுவர்களை சுத்தப்படுத்தி, வெள்ளை அடித்தனர். துருப்பிடித்து காணப்பட்ட ஜன்னல் கம்பிகள் மற்றும் கதவுகளை சுத்தப்படுத்தி பெயின்ட் அடித்தனர். பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்திருந்த குப்பைகளை அகற்றி அவற்றை தூய்மைப்படுத்தினர். இந்த பணி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதுகுறித்து மேற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் கூறுகையில், “போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பள்ளிகள், அரசு விடுதிகள் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து போலீசார் இந்த சமூக சேவைப்பணி தொடர்ந்து வாரந்தோறும் நடத்தப்படும்,’’ என்றனர்.
 

பனமரத்துப்பட்டி–மல்லூர் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி          19.08.2013

பனமரத்துப்பட்டி–மல்லூர் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பெரியசாமி, துணை தலைவர் பாலசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். ஊர்வலத்துக்கு செயல் அலுவலர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு கோஷங்களை எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றார்கள்.

இதேபோல மல்லூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் அய்யனார் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 

ரூ.1500 கோடியில் மாணவர்களுக்கு மடிக்கணினி

Print PDF

தினமணி                17.08.2013

ரூ.1500 கோடியில் மாணவர்களுக்கு மடிக்கணினி

கல்லூரி, மாணவர்களுக்கு ரூ.1500 கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பி.வி ரமணா கூறினார்.

பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மடிக்கணினிகள் வழங்கும் விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜா தலைமை வகித்தார்.

திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வி மோகனவடிவேல், பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் திருவள்ளுவன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.வி ரமணா 574 மடிக்கணிகளை மாணவிகளுக்கு வழங்கி பேசியது:

மாணவர்கள் அறிவு வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.1500 கோடி செலவில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

இதே போன்று பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவில் 343 மாணவர்களுக்கு மடிக்கணிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயராகவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 113 of 841