Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம்

Print PDF

தினமணி                17.08.2013

முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், மக்களுக்கு கூடுதல் சேவை அளிப்பதன் மூலமாக முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம் என்றும், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறினார்.

 சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து மேயர் ப.மல்லிகா பரமசிவம் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார். ரூ.25 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

 விருதைப் பெற்றுக்கொண்ட மேயர், ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை திரும்பினார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், முக்கியப் பிரமுகர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மேயரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 பின்னர், செய்தியாளர்களிடம் மேயர் கூறியது:

 மக்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து சேவையாற்ற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஈரோடு மாநகராட்சி மக்களின் தேவை அறிந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்காக, தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியைத் தேர்வு செய்தற்கு முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருது ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. வரும் காலங்களில் ஈரோடு மாநகரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்த விருது உதவும். மக்களின் தேவைகளை அறிந்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றி அடுத்த ஆண்டும் சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவோம். முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம் என்றார்.

கொண்டாட்டம்

 தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர், மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் மு.விஜயலட்சுமி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 சங்க கெüரவத் தலைவர் ராஜாமணி, பொதுச் செயலாளர் பிரேம்குமார், துணை தலைவர் திருமூர்த்தி, பிரசார செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலாளர் ஸ்ரீமுத்துசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

சிறந்த மாநகராட்சியாக தேர்வு ஈரோட்டில் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்

Print PDF

தினகரன்                17.08.2013

சிறந்த மாநகராட்சியாக தேர்வு ஈரோட்டில் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்

ஈரோடு: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஊழியர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை கோட்டை யில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது ஈரோடு மாநகராட்சிக்கு கிடைத்தது. சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் 25 லட்சம் ரூபாய்கான காசோலையை மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு பெற்றதை அடுத்து நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.  பின்னர் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவ தலைவர் ராஜாமணி, பொதுச்செயலாளர் பிரேம்குமார், துணைத்தலைவர் திருமூர்த்தி, பிரசார செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலாளர் ஸ்ரீமுத்துசாமி உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: மக்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து சேவை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களின் தேவை அறிந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியை தேர்வு செய்தற்கு மாநகராட்சி சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் காலங்களில் ஈரோடு மாநகரை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எங்களுக்கு இந்த விருது ஊக்கத்தை கொடுத்துள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து இன்னும் சிறப்பாக பணியாற்றி அடுத்த ஆண்டும் ஈரோடு மாநகராட்சி தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவோம். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

 

பேருந்து நிலைய பெயர் மாற்றம் மேயருக்கு காங்கிரஸ் நன்றி

Print PDF

தினகரன்                17.08.2013

பேருந்து நிலைய பெயர் மாற்றம் மேயருக்கு காங்கிரஸ் நன்றி


ஈரோடு: ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் பாட்சா மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவத்தை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு பஸ் ஸ்டேண்டில் சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் என்று பெயர் பொறித்த நியான் லைட் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த போர்டை அகற்றி விட்டு சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என்று வைக்க வேண்டும் என்று கடந்த 4ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டது.

எங்களின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாநகராட்சி சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என பெயர் பொறித்த போர்டு வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 


Page 114 of 841